இவ்வுலகில் வாழக்கூடிய அனைத்து மனிதர்களும் பாகுபாடின்றி மரணத்தை சுவைத்தே தீர வேண்டும்.
ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தை சுவைத்தே தீரவேணடும். (3:185)
இது அல்லாஹ் விதித்த விதியாகும். இதிலிருந்து தப்பியவர் உலகில் எவறுமில்லை என்று வல்ல அல்லாஹ் குறிப்பிடுகிறான்.
அவர்களுடைய தவணை (மரணவேளை) வந்துவிட்டால் ஒரு கணமேனும் (உயிர் பறிக்கப்படுவதில்) அவர்கள் (வானவர்கள்) பிந்தவு மாட்டார்கள், முந்தவும் மாட்டார்கள். (16:61)
மனிதர்கள் வாழும் போது கண்ணியம் அளித்த இஸ்லாம் மரணிக்கும் போதும் கண்ணியப்படுத்துகிறது. மரணிக்கும் மனிதர்களை அடக்கம் செய்வதற்கு முன்னால் அவர்களுக்காக ஜனாஸா தொழ வைக்குமாறும் அதன்மூலமாக அவர்களுக்காக பாவமன்னிப்புக்கோரி அல்லாஹ்விடம் பிராதிக்குமாறும் அடக்கம் செய்வதற்காக கொண்டு செல்லப்படும். ஜனாஸாவை பின் தொடர்ந்து செல்லுமாறும் அவர்கள் அடக்கம் செய்து வரும் வரை பின்தொடர (முஸ்லிமான) நம்மை நபி(ஸல்) அவர்கள வலியுறுத்தியுள்ளார்கள். மேலும் இது முஸ்லிம் சகோதரரர்கள் மத்தியில் பேணப்பட வேண்டிய உரிமையாகும் என்று நபி(ஸல்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
1. ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் ஐந்து அவை ஸலாமுக்கு பதிலுரைப்பது நோயாளியை விசாரிப்பது ஜனாஸாவை பின் தொடர்வது விருந்தழைப்பை ஏற்றுக் கொள்வது தும்மு கொண்டிருப்பவருக்கு மறுமொழி கூறுவது ஆகியவையாகும். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்
2. நபி(ஸல்) அவர்கள் எங்களுக்கு ஏழு விஷயங்களை(ச் செய்யும் படி) கட்டளையிட்டார்கள். ஜனாஸாவை பின் தெடர்வதால், நோயாளியை நலம் விசாரித்தல், விருந்துக்கு அழைப்பவரின் அழைப்புக்கு பதிலளித்தல், அநீதி இழைக்கப்பட்டவருக்கு உதவுதல், செய்த சத்தியத்தை பூரணமாக நிறைவேற்றுதல் ஸலாமுக்கு பதில் கூறுதல், தும்முபவருக்கு வர் அல்ஹம்துலில்லாஹ் எனக் கூறினால் அருகிலிருப்பவர் யர்ஹமுகல்லாஹ் என மறுமொழி கூறும்படியும் கட்டளையிட்டார்கள். அறிவிப்பவர்: பராவுபின் ஆஸிப்(ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்
3. யார் ஈமானுடன், நன்மையை நாடியவராக முஸ்லிமுடைய ஜனாஸாவை பின்தொடர்ந்து ஜனாஸாவை தொழ வைக்கப்படும் வரை (ஜனாஸாவுடன்) இருக்கிறாரோ நிச்சயமாக இரண்டு கிராஅத் நன்மையளவு உள்ள கூலியை பெற்றவராக திரும்புகிறார். ஒவ்வொரு கிராஅத்தின் அளவு உஹது அளவுள்ளதாகும். எவர் ஜனாஸாவைத் தொழுது அது அடக்கம் செய்யப்படுவதற்கு முன்னால் திரும்பிவிடுகிறாரோ நிச்சயமாக ஒரு கிராஅத் நன்மையை பெற்றவராக திரும்பிவிடுகிறார். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்: புகாரி
4. யார் ஜனாஸாத் தொழுகையில் பங்கேற்கின்றாரோ அவருக்கு ஒரு கிராஅத் நன்மையுண்டு யார் அடக்கம் செய்யப்படும்வரை கலந்து கொள்கின்றாரோ அவருக்கு இரண்டு கிராஅத்கள் நன்மை உண்டென நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது இரண்டு கிராஅத்கள் என்றால் என்ன? என வினவப்பட்டது அதற்கவர்கள் ''இரண்டு பெரிய மலைகளைப் போன்ற அளவு (நன்மை)'' என்றார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்
ஒவ்வொரு முஸ்லிமும் ஜனாஸாவை பின் தொடர வேண்டுமென்றும் அது ஒரு முஸ்லிம் பிற முஸ்லிம் சகோதரருக்கு செய்ய வேண்டிய உரிமையாகும் என்றும், இதனால் அவருக்கு மதினாவில் உள்ள உஹது மலை அளவுள்ள நன்மை கிடைக்குமென்றும் நற்செய்தி வழங்கினார்கள் நபி(ஸல்) அவர்கள் ஆனால் இன்றுள்ள நிலமையை காணுகிறபோது கைசேதப்பட வேண்டியதாக இருக்கிறது மனிதநேயமே அற்றுபோய் ம்டக்கிறது. முஸ்லிமான ஜனாஸாவைத் தொழுவதோ அல்லது அதை பின்தொடர்வதோ மேலும் அடக்கம் செய்யப்படும் வரை காத்திருப்பது ஜனாஸாவின் நெருங்கிய ரத்தபந்தமுள்ள உறவினர்களே மற்றவர்கள் ஏறிட்டு கூட பார்ப்பதில்லை. ஏன் ஜனாஸாவின் உறவினர்கள் கூட இவ்வாறு நடந்து கொள்வது வேதனையிலும் வேதனை காணரம் பொருளாதார பேதமை, ஒன்றுபட்டு இருக்கவேண்டிய முஸ்லிம் சமுதாயத்தில் ஒருவருக்கொருவர் அன்னியொன்யம், இதனால் மனித நேயமே பாதிக்கப்படுகிறது. இஸ்லாத்தை பின்பற்றும் முஸ்லிம் சமுதாயம் மேற்கண்ட காரணம்ளை களைந்து நபி(ஸல்) அவர்களின் உபதேசங்களை பின்பற்ற வேண்டும்.
பெண்கள் ஜனாஸாவை பின் தொடரலாமா?
ஜானாஸாவை பின்தொடர பெக்ளுக்கு மார்க்கத்தில் அனுமதி உண்டா என்று ஐயம் ஏற்படலாம்.
ஸஹாபிய பெண்மணி உம்மு அதிய்யா(ரலி) அவர்களே விளக்கமளித்துள்ளார்கள்.
5. ஜனாஸாவைப் பின் தொடர்ந்து செல்ல (பெண்களாகிய) நாங்கள் நபி(ஸல்) அவர்களால் தடுக்கப்பட்டிருந்தோம். ஆனால் வன்மையாக நாங்கள் தடுக்கப்படவில்லை. நூல்கள்: புகாரி, முஸ்லிம்
நபி(ஸல்) அவர்கள் காலத்தில் ஜனாஸா தொழுகைகளில் ஸஹாபிய பெண்மணிகளில் ஒருபெண்மணி ஜனாஸாவை பின் துயர்ந்து சென்றதாக ஒரு ஹதீஸ் இடம் பெற்றுள்ளது.
6. ''நபி(ஸல்) அவர்கள் ஒரு ஜனாஸாவைபின் தொடர்ந்து சென்றபோது ஒரு பெண் அதை பின்தொடர்ந்து வருவதை உடனிருந்த உமர்(ரலி) கண்டு சத்தம் எழுப்பினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் ''உமரே அவளை விட்டு விடு'' என்றார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்கள்: நஸயீ, இப்னுமாஜா
எனினும் ஆண்களுக்கு ஜனாஸாவை பின் தொடர்ந்து செல்ல வேண்டும் என்ற அவசியம் பெண்களுக்கு இல்லை பொது நலன் கருதியே நபி(ஸல்) அவர்கள் பெண்களுக்கு ஜனாஸாவை பின் தொடர்ந்து செல்ல தடுத்து நிறுத்தி இருக்கவேண்டும். மேலும் பெண்கள் ஜனாஸாத் தொழுகை தொழவும் நபி(ஸல்) அவர்கள் அங்கீகாரம் வழங்கியுள்ளார்கள்.
7. பிரசவத் தொடகத்துடனேயே இறந்துவிட்ட பெண்ணிற்கு நபி(ஸல்) அவர்கள் ஜனாஸாத் தொழுத போது மையித்தின் நடுப்பகுதிக்கு நேராக நின்றார்கள். அப்போது நான் நபி(ஸல்) அவர்களுக்கு பின்னால் தொழுதேன்''. அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி) நூல்: புகாரி
வேறு சில ஹதீஸ்களில் நபி(ஸல்) அவர்களுக்கு பின்னால் பெண்கள் தொழுத போது அவர்கள் தடுக்கவுமில்லை பெண்கள் தொழுமாறு வலியுறுத்தவுமில்லை.
ஜனாஸாவை பின் தொடர்ந்து செல்பவர் நடந்துகொள்ளும் முறைகளையும் நபி(ஸல்) அவர்கள் நவின்றுள்ளார்கள்.
8. நீங்கள் ஜனாஸாவைக் கண்டால் எழுந்து நில்லுங்கள். அதைப்பின் தொடர்ந்து செல்பவர் (அது பூமியில்) வைக்கப்படும் வரை உட்காரவேண்டாம் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்
9. உங்களிலொருவர் ஜனாஸாவைக் கண்டும் அதனுடன் நடந்து செல்லபோவதில்லை என்றால் அவர் அதைக் கடந்து செல்லும் வரை அல்லது அது அவரை கடந்து செல்லும் வரை அல்லது அவருக்கு முன்னால் (பூமியில்) வைக்கப்படும் வரை எழுந்து நிற்கட்டும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஆமீர் பின் ரபீ(ரலி) நூல்கள்: புகாரி
ஜனாஸாவைப் பின் தொடர்ந்து செல்பவர் அது கீழே வைக்கப்படும் வரை உட்கார கூடாது. மேலும் ஜனாஸாவைப் பின்தொடர முடியாதவர்கள் அவரை விட்டும் கடக்கும் வரை அல்லது கண்ணுக்கு எட்டும் தூரத்தில் ஜனாஸா வைக்கப்படுமானால் அதுவரை நிற்கட்டும் என்று நபி(ஸல்) அவர்கள் அறிவுறுத்தி இருக்கிறார்கள்.
ஜனாஸாத் தொழுகையை ஒரு தொழுகையாக நபி(ஸல்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். தொழுவதின் சிறப்பை ஏற்கனவே ஆரம்ப ஹதீஸ்களில் கண்டோம். அது சமபந்தமான ஒரு சில ஹதீஸ்களை காண்போம்.
10. ஒரு ஜனாஸாவை முஸ்லிம்களில் நூறுபேரைக் அடையக் கூடிய ஒரு குழு தொழுவார்களேயானால் மேலும் அவருக்காக »பா அத் செய்வார்களேயானால் அவர் விஷயத்தில் அவர்களுடைய பரிந்து ஏற்றுக் கொள்ளப்படும். அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி) நூல்: முஸ்லிம்
11. நான் நபி(ஸல்) அவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். எந்த ஒரு முஸ்லிமான ஜனாஸாவுக்கும் அதற்காக அல்லாஹ்வுக்கு எதைக் கொண்டும் இணை வைக்காத நாற்பது நபர்கள் நின்று தொழுவார்களேயானால் அவர் விஷயத்தில் அவர்களுடைய பரிந்துரை அல்லஹ் ஏற்றுக் கொள்வான். அறிவிப்பவர்: அப்துல்லாஹ்பின் அப்பாஸ்(ரலி) நூல்: முஸ்லிம்
ஜனாஸாத் தொழுகை நடத்துவதின் மாண்பினை நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். மேலும் ஜனாஸாத் தொழுகை தொழுபவர்களால் செய்யப்படும் பரிந்துரை ஏற்றுக் கொள்ளப்படும் என்று நற்செய்தி வழங்கியுள்ளார்கள்.
ஜனாஸாத் தொழுகை மற்ற கடமை, உபரித் தொழுகையை விட வித்தியாசமானதாகும் இதில் ருகூவோ, அல்லது ஸுஜுதோ அறவே கிடையாது. மாறாக பிரார்த்தனை மட்டும் தான் என்பதை ஜனாஸாவின் சட்ட திட்டங்கள் தெளிவாக்குகின்றன. ஜனாஸாத் தொழும் முறையை பார்ப்பதற்கு முன்னால் யாருக்கு ஜனாஸா தொழுகை நடத்தல் வேண்டும், யாருக்கெல்லாம் ஜனாஸாத் தொழுகை கூடாது என்பதை சுருக்கமாக அறிந்துக் கொள்வோம். முஸ்லிமான ஆண் பெண் ஆகிய அனைவருக்கும் ஜனாஸா தொழுகை நடத்தலாம் இதில் யாருக்கும் தடையில்லை ஏன் அவர்கள் நோயாளியாக இருந்தாலும், அல்லஹ்வின் பாதையில் கொல்லப்பட்டாலும் ஜனாஸாத் தொழுகை நடத்தலாம். மேலும் சிறுவர் சிறுமியர் பச்சிளம் குழந்தைகள் போன்ற பாவம் அறியா பருவமடையாத குழந்தைகள் இறந்துவிட்டால் ஜனாஸாத் தொழுகை உண்டா என்று ஐயங்கள் ஏற்படலாம்.
குழந்தைகளுக்கு ஜனாஸாத் தொழுகை விஷயத்தில் இருவிதமான கருத்துகள் நிகழ்கின்றன.
12. நபி(ஸல்) அவர்கள் தம் மகன் இப்ராஹீம்(ரலி) இறந்த போது அவருக்கு ஜனாஸாத் தொழுகை நடத்தவில்லை. அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி) நூல்கள்: அபூதா¥த், அஹமத்
13. அன்சாரி குழந்தைகளில் ஒரு குழந்தையில் ஜனாஸா நபி(ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்பட்டது. அவருக்கு ஜனாஸாத் தொழுகை நடத்தினார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி) நூல்கள்: முஸ்லிம், நஸயீ
14. அல்லாஹ்வின் மீது ஆணையாக நபி(ஸல்) அவர்கள் பைளா என்ற நபரின் இருமகன்களுக்கும் பள்ளிவாயிலில் தொழவைத்தார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி) நூல்: முஸ்லிம்
சிறுவர்களுக்கும், குறைமாதக் குழந்தைகளுக்கும் ஜனாஸா தொழுகை உண்டு.
சிறுவருக்கு (ஜனாஸா) தொழவைக்கப்படும். (அபூதா¥துடைய அறிவிப்பில் ''குறைமாதக் குழந்தைக்கும் தொழ வைக்கப்படும்'' என்றுள்ளது) மேலும் அதன் பெற்றோரின் பாவமன்னிப்புக்கும், (அல்லாஹ்வின்) ரஹ்மத்துக்கும் துஆ செய்யப்படும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (முகீரத்துபின்ஷுஃபா(ரழி) அபூதா¥த், நஸயீ, திர்மிதீ)
''நபி(ஸல்) அவர்களிடம் அன்ஸாரிகளின் சிறுவர்களில் இறந்த ஒருவரை (மய்யித்தாக) கொண்டுவரப்பட்டது. அப்போது அவர்கள் அச்சிறுவரின் மய்யித்துக்கு தொழ வைத்தார்கள். (ஆயிஷா(ரழி), முஸ்லிம், நஸயீ)
தொழவைக்கப்பட வேண்டிய குறைமாதக் குழந்தை எத்தனை மாதத்துடையதாயிருத்தல் வேண்டும்?
''நிச்சயமாக உங்களில் ஒவ்வொரு வரும் படைக்கப்பட்ட விபரமாவது: ஒருவர் தமது தாய் வயிற்றில் 40 தினங்கள் இந்திரியமகாவும், அது போன்றே (40 தினங்கள்) கர்ப்பப்பையில் ஒட்டி உறிஞ்சும் தன்மை வாய்ந்ததாகவும் (ஆக்கப்பட்டு,) பின்னர் அதேபோன்று (40தினங்கள்) தசைபிண்டமாகவும் அமைக்கப்படுகிறார். பிறகு (தசைப்பிண்டமாயுள்ள) அவரிடத்தில் நான்கு விஷயங்களைக் கொண்டு ஒரு மலக்கை அல்லாஹ் அனுப்பி, அவருடைய அமல், அவருடைய தவணை, அவருடைய ரிஜ்கு-வருவாய், நற்பாக்கியசாலி, அல்லது துர்பாக்கியசாலி ஆகியவை எழுதப்பட்டு, பின்னர் அவருக்கு உயிர் ஊதப்படுகிறது என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (இப்னுமஸ்ஊத்(ரழி) புகாரீ, முஸ்லிம்)
இந்த ஹதீஸின்படி வயிற்றிலுள்ள சிசுவுக்கு மூன்று நாற்பது தினங்கள் (4 மாதங்கள்) பூர்த்தியானவுடன் உயிர் ஊதப்படுகிறது என்பதை அறிகிறோம். 4மாதங்களுக்குப்பிறகு மரித்துப் பிறக்கும் குழந்தையைத்தான் மரித்த குழந்தை என்று கூற முடியுமே அன்றி, அதற்கு முன்னால் பிறந்ததை மரித்த குழந்தை என்று கூறமுடியாது. காரணம் அதற்கு உயிர் ஊதப்படவேயில்லை. ஆகவே 4 மாதங்கள் பூர்த்தியாம் தாயின் வயிற்றிலிருந்து மரித்துப் பிறக்கும் குழந்தையைத் தான் கழுவி, குளிப்பாட்டி தொழவைக்கவேண்டும். அதற்கு முன் தாய் வயிற்றிலிருந்து வெளிவந்ததைத் தொழவைக்காமல் கபனிட்டு அடக்கி விடவேண்டும்.
இதற்கு மாற்றமான ஹதீஸ்களின் நிலை.
''குறைமாதக் குழந்தை அழும் சப்தத்தோடு பிறந்து இறந்தால் அதற்கு தொழவைக்கப்படும்; மேலும் அது வாரிசுரிமை பெற்றதுமாகும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (ஜாபிர்(ரழி), இப்னுமாஜ்ஜா, தாரிமி)
இதன் அறிவிப்பாளர் தொடரில் ''ரபீஉபின்பத்ரு'' என்பவர் இடம் பெற்றுள்ளார். இவரைப் பற்றி இமாம் புகாரீ, அபூதா¥த் ஆகியோர் பலகீனமானவர் என்று கூறியிருக்கின்றனர்.
மேலும் இக்கருத்தை மையமாகக் கொண்டு, ''குழந்தை அழும் சப்தத்தோடு பிறந்தலான்றி அதற்கு தொழவைக்கப்படமாட்டாது, இன்னும் வாரிசுரிமை பெறவும் மாட்டாது'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளதாக, திர்மிதீயில் பதிவாகியள்ள அறிவிப்பு பற்றி இமாம் திர்மிதீ அவர்களே ''இந்த அறிவிப்பு மவ்கூஃபு - ஸஹாபியின் சொல்தான் என்பதற்கு பல அறிவிப்புகளின் மூலம் சான்றுகள் இருக்கின்றனவேயன்றி, மர்ஃபூஉ - நபி(ஸல்) அவர்களின் சொல் என்பதற்கான சரியான சான்றுகள் எதுவுமில்லை'' என்று குறிப்பிட்டுள்ளார்கள்.
எனவே உயிர் ஊதப்பட்டு மனித சமுதாயத்தில் ஓர் அங்கமாகிவிட்ட ஒரு குழந்தை உயிருடன் பிறந்து பின்னர் இறந்தாலென்ன? மரித்துப்பிறந்தாலென்ன? அதற்கு தொழவைப்பதே முறையாகும். ஏனெனில் ''குறைமாதக்குழந்தைக்கும் தொழவைக்கப்படும்'' என்ற மேற்காணும் ஹதீஸ் பொதுவாயிருப்பதோடு, நபி(ஸல்) அவர்கள் கூறியிருப்பதாகவே முறையான ஆதாரமுமிருப்பதால் 4 மாதங்களுக்கு மேல் பிறக்கும் குழந்தை மரித்துப் பிறந்தாலும் (அதற்கும்) தொழவைக்கவேண்டும் என்பதை அறிகிறோம்.
இறந்த குழந்தைக்கு தொழ வைக்கும் போது என்ன துஆ ஓத வேண்டும்?
இறந்த குழந்தைக்கு தொழ வைக்கும் போது நபி(ஸல்) அவர்கள் என்ன துஆ ஓதினார்கள் என்ற விபரம் ஹதீஸ்களில் காணப்படாததால் இமாம் புகாரீ அவர்கள் தாபியீன்களில் ஒருவராகிய ஹஸனுல் பஸ்ரீ(ரஹ்) அவர்கள் குழந்தை மய்யித்துக்கு ஓதி வந்துள்ள துஆ ஒன்றை அறிவிப்பாளர் தொடரின்றி தமக்குக் கிடைத்துள்ளதாக, பின்வருமாறு புகாரீயில் பதிவு செய்துள்ளார்கள். அதாவது:
ஹஸனுல்பஸரீ அவர்கள் குழந்தை மய்யித்துக்கு தொழவைக்கும் போது, சூரத்துல் ஃபாத்திஹா ஓதுவதோடு,
''அல்லாஹும்மஜ்அல்ஹூ -லனா- ஸலஃபன் - வ- ஃபரத்தன் -வ- துக்ரன் -வ-அஜ்ரா''
பொருள்: யா அல்லாஹ் இக்குழந்தையை எங்களுக்கு பலனுள்ளதாகவும், எங்களுக்கானவற்றை முற்கூட்டியே தயார் செய்யக்கூடியதாகவும், மறுமைக்கானவற்றை எங்களுக்கு சித்தப்படுத்தக்கூடியதாகவும் (நாங்கள்) நற்கூலி பெறுவதற்குக் காரணமானதாகவும் ஆக்கி அருள்வாயாக!
ஆகவே மேற்காணும் இந்த துஆவையோ, அல்லது இது போன்று ஓரளவேனும் ஆதாரமான மற்ற துஆவையோ, அல்லது மேற்காணும் வகையில் முகீரத்துபின் ஷுஃபா(ரழி) அவர்களின் அறிவிப்பில் இடம் பெற்றிருப்பது போல், சிறுவருக்கு தொழவைக்கப்படும், மேலும் அவர்களின் பெற்றோரின் பாவமன்னிப்புக்கும், அல்லாஹ்வின் ரஹ்மத்துக்கும் துஆ செய்யப்படும்'' என்பதற்கேற்ப துஆ செய்துகொள்வதும் முறையாகும்.நபி(ஸல்) அவர்கள் தம் மகனார் இப்ராஹீம்(ரலி) அவர்களுக்கு ஜனாஸாத் தொழுகை நடத்தவில்லையென்றாலும் மற்ற குழந்தைகளின் ஜனாஸாவுக்கு தொழுகை நடத்தி அங்கீகாரம் வழங்கியுள்ளார்கள். எனவே குழந்தைகளுக்கும் ஜனாஸாத் தொழுகை தொழலாம் என்பது மேற்கண்ட ஹதீஸ் மூலமாக தெளிவாகிறது. மேலும் குற்றங்களால் மரணதண்டனை பெற்றவர்களுக்கும் ஜனாஸாத் தொழுகை நடத்தலாம்.
15. ஜுஹைனா கூட்டத்தாரைச் சோந்த பெண் விபச்சாரத்தின் குற்றத்திற்காக மரண தண்டனை அடைந்தபோது நபி(ஸல்) அவர்கள் அவருக்கு தொழுவித்தார்கள். அறிவிப்பவர்: இம்ரான்(ரலி) நூல்: முஸ்லிம், நஸயீ
16. பாவசம் செய்தவர், கடனாளி, மற்றும் போரில் மோசடி செய்தவர்களுக்கு நபி(ஸல்) அவர்கள் ஜனாஸாத் தொழுகை நடத்தவில்லையென்றாலும். உங்களது தோழருக்காக தொழுங்கள் என்று மற்ற தோழர்களை பார்த்து கூறுவார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்: புகாரி
இவர்கள் விஷயத்தில் நபி(ஸல்) அவர்கள் ஜனாஸாத் தொழுகை நடத்தலாம் என்று அங்கீகாரம் அளித்துள்ளார்கள். எனவே ஜனாஸாத் தொழுகை நடத்தலாம். தற்கொலை செய்தவருக்காக ஜனாஸாத் தொழுகை தொழக் கூடாது என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
17. ஒரு மனிதர் நோயுற்றபோது அவர் திடுக்கத்துள்ளானார். அவருடைய அண்டை வீட்டுக்காரர் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களிடம் வந்து அவர் இறந்து விட்டார் என்று சொன்னார். அவரிடம் அவர் இறந்தது உனக்குத் தெரியுமா? என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். நான் அவரை (இறந்து போக) கண்டேன் என்றார். அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்க அவர் இறக்கவில்லை என்று சொன்னார்கள். பிறகு அவர் (நோயாளிடம்) வந்ததும் அவர் கூர் ஈட்டியால் தன்னை அறுத்துக் கொண்டதைக் கண்டார். உடனே நபி(ஸல்) அவர்களிடம் வந்து அவர் இறந்துவிட்டார் என்று தெரிவித்தார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் இறந்தது உனக்கு எப்படி தெரியுமா? என்று கேட்டார்கள். அதற்கு அம்மனிதர் ''அவர் தன்னிடமிருந்த கூரிய முனையுள்ள ஈட்டியால் அறுத்து கொண்டார். நீ பார்த்தாயா? என்று நபி(ஸல்) அவர்கள் வினவ அதற்கு அவர் ''ஆம்'' என்றதும் நபி(ஸல்) அவர்கள் அவ்வாறென்றால் நான் அவருக்கு தொழுவிக்க மாட்டேன் என்று சொன்னார்கள். அறிவிப்பவர்: ஜாபிர் பின் சமுரா(ரலி) நூல்கள்: முஸ்லிம், அபூதா¥த்
தற்கொலை செய்தவனுக்கு நரகம் தான் தண்டனை என்று நபி(ஸல்) அவர்கள் (வேறு பல ஹதீஸ்களில்) குறிப்பிட்டுள்ளார்கள். மேலும் தற்கொலை செய்தவனுக்கு ஜனாஸா தொழுகை நடத்த மாட்டேன் என்று திட்டவட்டமாக கூறி பிறர் தற்கொலை செய்தவறுக்கு ஜனாஸாத் தொழுகை தொழவைக்கவும் அங்கீகாரம் வழங்கவில்லை. எனவே தற்கொலை செய்தவரை குளிப்பாட்டி அப்படியே அடக்கி விடவேண்டும்.
மேலும் இணைவைப்பாளர் மற்றும் முனஃபிகீன்களுக்கும் ஜனாஸா தொழுகை தொழுவிக்க கூடாது.
இணைவைப்பவர்கள் தம் நெருங்கிய உறவினர்களாக இருப்பினும், நிச்சயமாக அவர்கள் என்று தெளிவான பின் அவர்களுக்காக பாவமன்னிப்பு கேட்பதும் நபிக்கும் ஈமான் கொண்டவர்களுக்கும் உகந்ததல்ல. (அல்குர்ஆன் 9:113)
மேலும் நயவஞ்சகர்களுக்கும் ஜனாஸாத் தொழுகை நடத்தல் கூடாது என்றும் எனினும் அவர்கள் இரட்டைவேடம் பூண்டு இஸ்லாத்திற்கெதிராக பெறும் சூழ்ச்சி செய்து இஸ்லாத்தை இழிவுப்படுத்துகிறார்கள். இவர்கள் பம்ரங்கமாக அல்லாஹ்வையும் அவனுடைய திருத்தூதரையும் நிரகரிப்பவர்கள் என்று அல்லாஹ் கூறுகிறான். நபி(ஸல்) அவர்கள் முனாஃபீகின்களின் தலைவன் அப்துல்லாஹ் பின் உபய்யி இறந்தபோது அவருடைய ஜனாஸழவைத் தொழவைத்தபோது அல்லாஹ் கண்டித்து வசனத்தை இறக்கியருளினான்.
அவர்களில் யாராவது ஒருவர் இறந்து விட்டால் அவருக்காக நீர் ஒருக்காலும் (ஜனாஸாத்) தொழுகை தொழவேண்டாம்; இன்னும் அவர் கப்ரில் (பிராத்தனைக்காக) நிற்கவேண்டாம்.
(குர்ஆன் வசனத்தொடர்) ஏனென்றால் நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வையும், அவன் தூதரையும் நிராகரித்து பாவிகளாகவே இறந்தார்கள். (9:84)
ஜனாஸாத் தொழுகை தொழும் முறை:-
ஜனாஸாத் தொழுகை நடத்தும் முறையை நபி(ஸல்) அவர்கள் கற்றுதந்துள்ளார்கள். நாமும் அவர்கள் செயல்முறைப்படுத்தி அடிப்படையில்தான் தொழவேண்டும்.
ஜனாஸாத் தொழுகையில் அணிஅணியாக நிற்கவேண்டும்
18. நபி(ஸல்) அவர்கள் நஜ்ஜா» (மன்னரு)க்கு ஜனாஸாத் தொழுவித்தார்கள். அப்போது தான் இரண்டாவது அல்லது மூன்றாவது அணியில் நின்றிருந்தேன். அறிவிப்பவர்: ஜாபிர்(ரலி) நூல்: புகாரி
19. நபி(ஸல்) அவர்கள் நஜ்ஜா»யின் மரணச் செய்தியைத் தம் தோழர்களுக்கு அறிவித்துவிட்டு பிறகு சற்று முன்னால் நகர்ந்தார்கள். மக்கள் அவர்களுக்குப் பின்னால் அணிவகுத்து நின்றதும் நபி(ஸல்) அவர்கள் நான்கு தக்பீர்கள் கூறி (ஜனாஸாத் தொழுகை நடத்தினார்கள்) அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்: புகாரி
ஜனாஸாத் தொழுகையில் நான்கு தக்பீர்கள் கூறி ஜனாஸாத் தொழுகை நடத்தப்பட வேண்டும் என்று செயல் விளக்கம் காட்டியுள்ளார்கள். மேலும் மற்றொரு ஹதீஸில் ஐந்து தக்பீர்கள் நபி(ஸல்) அவர்கள் கூறியதாக ஸைது இப்னு அர்க்கம்(ரலி) அவர்கள் அறிவிக்கும் எனவே ஜனாஸாத் தொழுகையில் ஐந்து தக்பீரும் கூறலாம்.
முதல் தகபீரில் ªரத்துல் ஃபாத்திஹா ஓதவேண்டும்
20. நான் இப்னு அப்பாஸ்(ரலி) பின்னால் நின்று ஜனாஸாத் தொழுதேன் அப்போது அவர் பாத்திஹா அத்தியாயத்தை (சப்தமாக) ஓதினார். பிறகு நீங்கள் இதை நபிவழி என அறிந்து கொள்வதற்காகவே (சப்தமிட்டு ஓதினேன்) என்று கூறினார். அறிவிப்பவர்: தல்ஹா(ரலி) நூல்: புகாரி
இரண்டாம் தக்பீரில் ஸலவாத்தும் மூன்றாம் தக்பீரில் பிராத்தனைகளையும் புரியவேண்டும்.
21. ஜனாஸாத் தொழுகையில் முதல் தக்பீருக்குப் பிறகு உள்ள மூன்று தக்பீர்களில் நபி(ஸல்) அவர்கள் மீது ஸலாவத்து சொல்வதும் தூய்மையான முறையில் (மய்யித்திற்கு) பிராத்தனை புரிவதும் ஸலாம் கூறுவதும் நபிவழியாகும். அறிவிப்பவர்: அபூஉமாமா நூல்கள்: ஹாம்ம், பைஹகீ
22. இரண்டாம் தக்பீரில் நபி(ஸல்) அவர்கள் மீது ஸலவாத் ஓத வேண்டும்.
அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின்
கமாஸல்லைத அலா இப்ராஹீம் வஅலா ஆலி இப்ராஹீம
இன்னக ஹமீதுன்மஜீத் அல்லாஹும்ம பாரிக் அலா முஹம்மதின்
வஅலா ஆலி முஹம்மதின் காபாரக்த அலா இப்ராஹீம
வஅலா ஆலி இப்ராஹீம இன்னக ஹமீதுன் மஜீத்
பொருள்:
இறைவா! முஹம்மத்(ஸல்) அவர்கள் மீதும், முஹம்மது(ஸல்) அவர்களின் குடும்பத்தினர் மீதும் இப்ராஹீம்(அலை) அவர்களின் மீதும் அவர்களின் குடும்பத்தினர் மீதும் அருள்புரிந்தைப்போல் அருள்புரிவாயாக! நிச்சயமாக நீ புகழப்பட்டவனாகவும் கண்ணியத்திற்குரியவனாகவும் இருக்கிறாய்! இறைவா! இப்ராஹீம்(அலை) அவர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் பரகத் செய்தது போல் முஹம்மது(ஸல்) அவர்களுக்கும் முஹம்மது(ஸல்) அவர்களின் குடும்பத்தினருக்கும் பரகத் செய்வாயாக! நிச்சயமாக நீ புகழப்பட்டவனாகவும் கண்ணியமிக்கவனாகவும் இருக்கின்றாய்! அறிவிப்பவர்: கவுபு இப்னு உஜ்ரா(ரலி) நூல்: புகாரி
மூன்றாம் நான்காம் தக்பீர்களில் மய்யித்திற்காக பிராத்தனை புரிய வேண்டும்.
23. நீங்கள் ஜனாஸாத் தொழுகை தொழுவீர்களேயானால் இறந்தவருக்காக பிராத்தனையை உரித்தாக்குங்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்கள்: அபூதா¥த், இப்னு ஹிப்பான்
இறந்தவருக்காக பிராத்தனை எவ்வாறெல்லாம் புரியலாம் என்பதை நபி(ஸல்) அவர்களே நமக்கு கற்றுதந்துள்ளார்கள்.
24. நபி(ஸல்) அவர்கள் செய்த (பின்வரும்) துஆவை நான் மனனம் செய்து கொண்டேன், இந்த சிறப்பான துஆவின் காரணத்தினால் அந்த மய்யித்து நானாக இருக்க கூடாதா என்று எண்ணினேன் என்று அவுஃப்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
ஹதீஸ் தொடர்
அல்லாஹும்மக்ஃபிர்லவு வர்ஹம்ஹீவ ஆஃபிஹி வஃபு அன்ஹு
வஅக்ரிம் நுஸுவு வவஸ்ªஃ மத்கலவு வஅக்ஸில்வு பில்மாயி
வஸ்ஸல்ஜி வல்பர்தி வனக்கிஹி மினல்கதாயா கமா நக்கைதங்
ஸவுபல் அப்யளு மினத்தனஸி வஅப்தில்ஹு தாரன்கைரன்
மின்தாரிஹி வஅஹ்லன் கைரன் மின் அஹ்லிஹி
வஜவுஜன்கைரன் மின்ஜவுஜீஹீ வஅத்கில்வுல் ஜன்னத
வஅ மின் அதாபில்கப்ரி வமின் அதாபின்னார்.
பொருள்: இறைவா! இவரை மன்னிப்பாயாக! இவருக்கு அருள்புரிவாயாக! இவருக்கு சுகம் அளிப்பாயாக! இவரது தவறுகளை அலட்சியப்படுத்துவாயாக! இவரது தங்குமிடத்தை மதிப்புமிக்கதாக ஆக்குவாயாக! மேலும் விசாலமாமனதாக இவரது நுழைவிடத்தை ஆக்குவாயாக! வெண்மையான ஆடைஅழுக்குகளிலிருந்து தூய்மைப்படுத்துவதுபோல் இவரை இவரது தவறுகளிலிருந்து தண்¡ராலும் ஆலங்கட்டி நீராலும் பனிக்கட்டியாலும் தூய்மையாக்குவாயாக! இவரது இல்லத்தை விட சிறந்த இல்லத்தை (மறுமையில்) அளிப்பாயாக! இவரது துணையைவிட சிறந்த துணையை இவருக்கு ஏற்படுத்துவாயாக! இவரைச் சுவனத்தில் நுழையச் செய்து கப்ருடைய வேதனை, நரகவேதனை ஆகியவற்றிலிருந்து காப்பாற்றுவாயாக! அறிவிப்பவர்: அவ்ஃப் இப்னுமாலிக்(ரலி) நூல்கள்: முஸ்லிம், அஹமத்
25. நபி(ஸல்) அவர்கள் ஜனாஸாவுக்கு தொழுவிக்கும் போது பின்வருமாறு ஓதுபவர்களாக இருந்தனர்.
அல்லாஹும்மக்ஃபிர் லிஹய்யினா வமய்யிதினா வஷாஹிதினா
வகாயிபினா வஸம்ரின, வகபீரினா வதகரினா வவுன்ஸானா
அல்லாஹும்ம மன் அஹ்யைதஹு மின்னா ஃபஅஹிஹு
அலல் இஸ்லாம் வமன் தவஃப்ஃபைதவு
மின்னா ஃபதவஃபவு அலல் ஈமான் அல்லாஹும்ம
லாதஹரிம்னா அஜ்ரவு வலாதுளில்லினா பஅதஹு
பொருள்:
யா அல்லாஹ்! எங்களில் உயிரோடிருப்பவர்களையும் மரணத்து விட்டவர்களையும் இங்கே வந்திருப்பவர்களையும், வராமலிப்பவர்களையும், எங்களில் சிறுவர்களையும், பெரியவர்களையும் எங்களில் ஆண்களையும், பெண்களையும் மன்னித்துவிடுவாயாக! இறைவா! எங்களில் உயிரோடு இருப்பவர்களை இஸ்லாமிய அடிப்படையில் வாழச் செய்வாயாக!
எங்களில் மரணித்துவிடுபவர்களை ஈமானுடனே மரணிக்க செய்வாயாக! இறைவா! இந்த மய்யித்தின் நற்செயல்களுக்குரிய கூலியை எங்களுக்கு தடுத்துவிடாதே! இவருக்கு பிறகு எங்களை வழிதவறச் செய்து விடாதே! அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்: அபூதா¥த், திர்மிதி
மேற்கண்ட துவாக்கள் அல்லாமல் வேறுபல துவாக்களை ஜனாஸாத் தொழுகையில் பிரார்த்திக்க நபி(ஸல்) அவர்கள் கற்றுதந்துள்ளார்கள். சுருங்கக்கருதி இங்கே தொகுக்கப்படவில்லை.
ஜனாஸாத் தொழுகையில் நான்கு அல்லது ஐந்து தக்பீர்கள் கூறியவாறு ஸலாம் கூற வேண்டும் என்பது ஹதிஸில் தெளிவாகிறது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மூன்று காரியங்களை செய்து கொண்டிருந்தார்கள். மக்கள் அவற்றை விட்டுவிட்டனர் அவற்றில் உள்ளதுதான் தொழுiயில் ஸலாம் கூறுவது போன்று ஜனாஸாத் தொழுகையில் ஸலாம் கூறுவதாகும். அறிவிப்பவர்: இப்னுமஸ்¥த்(ரலி) நூல்கள்: தப்ரானி, பைஹம்.
மன்னர் நஜ்ஜா» அவர்கள் முஸ்லிம்கள் வாழாப் பகுதியில் இறந்துவிட்டதனால் அவருக்காக நபி(ஸல்) அவர்கள் ஜனாஸாத் தொழுகை நடத்தினார்கள். இதே அடிப்படையில் இறந்துவிட்டால் தொழலாம். மாறாக தொழுதவறுக்காக மீண்டும் காயிப் ஜனாஸா தொழ அனுமதியில்லை மேலும் நபி(ஸல்) அவர்கள் இறந்து அடக்கப்பட்ட பணியாளர் கப்ருக்கருகில் தொழுததை ஆதாரம் காட்டுகிறார்கள் ஏனெனில் நபி(ஸல்) அவர்களுக்கு தெரியாமல் ஸஹாபாக்கள் அடக்கிவிட்டதால் நபி(ஸல்) அவர்கள் மீண்டும் தொழுதார்கள் பிறகு ''நான் உங்கள் மத்தியில் இருக்கும் போது உங்களில் யார் இறந்தாலும் எனக்கு தெரிவிக்காமல் இருக்க கூடாது. நிச்சயமாக எனது தொழுகை இறந்தவனுக்கு அருட்கொடையாகும் '' என்றார்கள். அறிவிப்பவர்: யªத் பின் ஸாபித் நூல்கள்: இப்னுமாஜா
நபி(ஸல்) அவர்கள் வாழும் காலத்தில்மரணிக்கும் எந்த நபரும் அவரைப் பற்றி உடன் நபி(ஸல்) அவர்களுக்கு தகவல் தெரிவிக்கவேண்டும் என்று கூறியுளளார்கள் இது நபி(ஸல்) அவர்கள் கப்ருகளில் போய் தொழுததை ஆதாரமாக எடுத்து கொள்ளமுடியாது. மேலும் நபி(ஸல்) அவர்கள் மதினாவில்இருக்கும்போது மக்காவில் இறந்த ஸஹாபிகளுக்கு ஜனாஸா தொழுகை நடத்தியதாக எவ்வித ஆதாரமும் இல்லை.
ஜனாஸா தொழுகையில் ஒவ்வொரு தக்பீரின்போது கைகளை உயர்த்தவேண்டுமா?
நிச்சயமாக உமர்(ரழி) அவர்கள் ஜனாஸா தொழுகையிலும், பெரு நாள் தொழுகையிலும் (கூறப்படும்) ஒவ்வொரு தக்பீரின் போதும் தமது கைகளை உயர்த்திக் கொண்டிருந்தார்கள். (பக்ருபின் ஸவாத்(ரழி) பைஹகீ, அல்அஸ்ரம்)
இவ்வறிவிப்பின் தொடரில் இப்னு ''லுஹைஆ'' வெனும் நம்பகமற்றவர் இடம் பெற்றுள்ளார். ஆகவே இது பலகீனமானதாகும். எனவே ஜனாஸா தொழுகையிலோ, பெருநாள் தொழுகையிலோ மேலதிகமாகக் கூறப்படும் தக்பீரின் போது, நபி(ஸல்) அவர்கள் தமது கைகளை உயர்த்தியதாகவோ, அல்லது உயர்த்தும் படி கூறியதாகவோ ஒரு ஹதீஸும் இல்லை.
(ஷஹீது) - போரில் கொல்லப்பட்டவருக்கும் தொழ வைக்கப்படும்.
''கைபர்'' போரின் போது, ஷஹீதாம் விட்ட ஒருவருக்கு நபி(ஸல்) அவர்கள் தமது ஜுப்பாவைக் கொண்டு கஃபனிட்டு, அவரைத் தமக்கு எதிரில் வைத்து தொழவைத்தார்கள். (ஹதீஸ் சுருக்கம், ஷத்தாதுபின் ஹாத்(ரழி) நஸயீ, பைஹகீ, ஹாக்கிம்)
நபி(ஸல்) அவர்கள் ''பத்ரு, உஹது'' போர் போன்ற ஆரம்பகாலப் போர்களின் போதெல்லாம் ஷஹீதாகியவர்களுக்கு தொழவைக்கவில்லை என்பதாக ஸஹீஹான ஹதீஸ்களில் காணப்பட்டாலும், பின்னர் ஹிஜ்ரீ 7ல் நடந்த ''கைபர்'' போரின் போது மேற்கண்டவாறு ஷஹீதுககு தொழவைத்துள்ளார்கள் என்பதாகவும் ஸஹீஹான ஹதீஸ்களில் காணப்படுவதால் அவர்களின் பிற்காலத்திய அனுஷ்டானங்களையே நாம் அமலுக்கு எடுத்துக்கொள்ளவேண்டும்.
தற்கொலை போன்ற பெரும் பாவங்கள் செய்தவரின் மய்யித்துக்கும் தொழவைக்கவேண்டும்.
வியாதியுற்றிருந்த நபித்தோழர் ஒருவர் தம்மிடமுள்ள அம்பு ஒன்றால் தற்கொலை செய்துகொண்டதைக் கேள்வியுற்ற நபி(ஸல்) அவர்கள் அவ்வாறாயின் அவருக்கு நான் தொழவைக்கமாட்டேன் என்றார்கள்.
(ஹதீஸ் சுருக்கம் - ஜாபிருபின் ஸமுரா(ரழி) முஸ்லிம், அபூதா¥த், திர்மிதீ, நஸயீ, இப்னுமாஜ்ஜா)
இவ்வறிவிப்பு பலகீனமானதாகும். ஏனெனில் இது ஸஹீஹ் முஸ்லிம் உள்பட பல ஹதீஸ் நூல்களில் இடம் பெற்றிருப்பினும், இதன் அறிவிப்பாளர் தொடர்கள் அனைத்திலும் ''ஸிமாக்குபின்ஹர்பு'' என்பவரே இடம் பெற்றுள்ளார்.
இவர்பற்றி ''ஷுஃபா, இப்னு முபாரக்'' ஆகியோர் பலகீனமானவர் என்றே குறிப்பிட்டுள்ளார்கள். மேலும் ''இவருடைய அறிவிப்பு அடிப்படையான - முக்கியமான விஷயமாயிருப்பின், இவருடைய அறிவிப்பை மட்டும் ஆதாரமாக வைத்து எதுவும் செய்யமுடியாது'' என்று இமாம் நஸயீ அவர்களும் விமர்சித்துள்ளார்கள்.
இவ்வடிப்படையில் பலகீனமான இவர் இடம் பெற்றுள்ள இவ்வறிவிப்பைத்தவிர வேறு எதிலும், தற்கொலை செய்து கொண்டவர் குறித்து நபி(ஸல்) அவர்கள் ''நான் தொழவைக்கமாட்டேன்'' என்று கூறியதாக வாசகம் இடம் பெறவில்லை. ஆகவே இந்த அறிவிப்பு பலகீனமானதாம் விடுவதோடு ''தற்கொலை செய்து கொண்டவருக்கு தொழவைக்கக்கூடாது'' என்ற சட்டத்தை எடுப்பதற்கும் அருகதையற்றதாகிவிடுகிறது.
எனவே மய்யித்தானவர், தற்கொலை செய்தல், குடித்தல், சூதாடுதல், திருடுதல், மோசடி செய்தல், தொழுகையை விடுதல், வட்டி வாங்குதல் போன்ற பெரிய பாவங்களைச் செய்த படுபாவியாயிருப்பினும் அவர் முஸ்லிமாயிருப்பின் அவருக்கு ஜனாஸா தொழவைக்கத்தான் வேண்டும். ஏனெனில் ஜனாஸா தொழுகையில் மய்யித்துக்காக பாவமன்னிப்பு தேடப்படுகிறது. பொதுவாக பாவமன்னிப்பு காபிர்களைத் தவிர மற்றவர்களுக்குச் செய்வதை குர்ஆன் தடைசெய்யவில்லை. மேற்காணும் பெரும் பாவங்களை ஒருவர் செய்வதால் பாவியாம் விடுவாரேயன்றி காஃபிராகிவிடமாட்டார். ஒருவர் நரகவாசி என்பதைத் தெளிவாக தெரிந்து கொண்ட பிறகு, அவருக்காக பாவமன்னிப்புத் தேடுவதையே அல்குர்ஆன் பின்வருமாறு தடைசெய்கிறது. முஷ்ரிக்குகள் - இணை வைப்ப வர்கள் தம் நெருங்கிய உறவினர்களாயிருப்பினும் நிச்சயமாக அவர்கள் நரகவாதிகள் என்று தெளிவாக்கப்பட்ட பின் அவர்களுக்காக மன்னிப்பு கோருவது நபிக்கும், மூமின்களுக்கும் முறைஅல்ல.
இப்ராஹீம் தம் தந்தைக்காக மன்னிப்புக்கோரியதெல்லாம், அவர் தம் தந்தைக்குச் செய்திருந்த ஒருவாக்குறுதிக்காகவேயன்றி வேறில்லை. உண்மையில் அவர் தந்தை அல்லாஹ்வுக்கு விரோதி என்பது தெளிவாகியதும் அதிலிருந்து அவர் விலகிக்கொண்டார். நிச்சயமாக இப்ராஹீம் இரக்கமுடையவராகவும், பொறுமையும், சாந்தமும் உடையவராகவும் இருந்தார். (9:113, 114)
ஆகவே மூமின்கள் (யாவரும்) சகோதரர்களேயாவர் (49:10) என்று அல்லாஹ்வும் ''ஒரு முஸ்லிம் பிறமுஸ்லிமுக்கு சகோதரர் ஆவார்'' என்று நபி(ஸல்) அவர்களும் கூறியிருப்பதை முன் வைத்து தற்கொலை செய்து கொண்டவர் உள்பட ஏனைய பெரும்பாவங்களைச் செய்துவிட்ட பாவியான சகோதரர்களுக்கும் நமது சகோதரர்கள் என்ற வகையில் அவர்களின் மய்யித்துத் தொழுகையை நடத்தி அவர்களுக்காக பாவமன்னிப்புத் தேடுவதே முறையாகும்.
மய்யித்தை கப்ரில் அடக்கிய பிறகு அதன் அருகில் நின்று தொழவைப்பது:
நபி(ஸல்) அவர்களால் சுகம் விசாரிக்கப்பட்டுக்கொண்டிருந்த ஒருவர் மரணமாகிவிட்டார். அவரை இரவில் ஸஹாபாக்கள் அடக்கம் செய்து விட்டு, காலையில் நபி(ஸல்) அவர்களிடம் கூறினார்கள். அதற்கு அவர்கள் எனக்கு ஏன் தெரிவிக்கவில்லை என்று கேட்க, இரவாயிருந்ததுடன், இருளாகவுமிருந்தது; உங்களுக்குச் சிரமம் அளிப்பதை நாங்கள் விரும்பவில்லை என்றார்கள். உடனே அவருடைய கப்ருக்கு வந்து (அதன் அருகில் நின்று) அவருக் ஜனாஸா தொழுகையைக் நிறைவேற்றினார்கள். (இப்னு அப்பாஸ்(ரழி) புகாரீ)
இவ்வாறு கப்ரில் அடக்கம் செய்த பிறகு தொழுவதென்பது ஏற்கனவே தொழவைக்காமல் அடக்கம் செய்யப்பட மய்யித்தாயிருந்தால், அவசியமாகும். மேற்காணும் அறிவிப்பில் கண்டவாறு, ஏற்கனவே தொழவைக்கப்பட்ட மய்யித்தாயிருந்தாலும், முன்னால் அதற்காக தொழாதவர்கள் தொழவதும் ஆகும். ஆனால் அது கட்டாயமல்ல. சிலர் மய்யித்துத் தொழுகை தொழுதுவிட்டால் மற்றவர் மீது அக்கடமை நீங்கி விடுகிறது.
வெளிåரில் மரணமாகியவருக்காக, மறைமுகமான (காயிப்) மய்யித்துத்தொழுகை:
''நிச்சயமாக நபி(ஸல்) அவர்கள் அபீசினிய மன்னர் நஸாஷீ(ரழி) அவர்கள் மரணித்த தினத்தன்று, அவரது மரணச்செய்தியை மக்களுக்கு அறிவித்து விட்டு (மற்றொரு அறிவிப்பில், ''உங்கள் சகோதரர் நஜாஷீ அவர்கள் உங்களுடைய நாடல்லாத வேறு நாட்டில் மரணமாகிவிட்டார் என்று கூறிவிட்டு'' என்று ) தாமும் மக்களுடன் தொழும்திடலுக்குப் புறப்பட்டுச் சென்று அவர்களை அணிவகுக்கச் செய்து நான்கு தக்பீர்கள் கூறி தொழவைத்தார்கள். (அபூஹுரைரா(ரலி) புகாரீ, முஸ்லிம்)
இவ்வறிவிப்பை அடிப்படையாக வைத்து சிலர் மறைமுகமான மய்யித்துத் தொழுகை யாருக்கும், எப்போதும் தொழவைப்பது ஆகும் என்கிறார்கள் மற்றும் சிலர்.
அ. நபி(ஸல்) அவர்கள் மட்டுமே அவர்கள் காலத்தில் இவ்வாறு மறைவான மய்யித்துத் தொழுகை நடத்தியுள்ளதாக ஹதீஸ்களில் காணப்படுகிறதே அன்றி அவர்களுக்குப் பின்னர் மற்ற நபித்தோழர்கள் யாருக்கேனும் இவ்வாறு தொழுகை நடத்தியதாக வரலாறு எதுவுமில்லை. ஆகவே இது நபி(ஸல்) அவர்களுக்கு மட்டும் பிரத்தியேகமானது. நாம் அவ்வாறு தொழுவது கூடாது என்று கூறுகிறார்கள். வேறு சிலரோ.
ஆ. மேற்காணும் ஹதீஸில் காணப்படும்'' உங்கள் சகோதரர் நஜாஷீ அவர்கள் உங்கள் நாடல்லாத வேறு நாட்டில் மரணமாம் விட்டார்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ள வாசகத்தை அடிப்படையாகக் கொண்டு, அந்நியநாட்டில் ஒருவர் மரணமாம், அவருக்கு ஜனாஸா தொழுகை நடத்தப்படாதிருந்த சூழ்நிலையில் நபி(ஸல்) அவர்கள் ''நஜாஷீ'' அவர்களுக்கு மதீனாவில் மறைவான ஜனாஸா தொழுகை நடத்தியிருப்பதால், இவ்வாறு பிறரால் ஜனாஸா தொழுகை நடத்தப்படாத நிலையில் உள்ள மய்யித்துக்கு மட்டுமே மறைமுகமான ஜனாஸா தொழுகை நடத்த வேண்டும் என்கிறார்கள்.
இ. இம்மூன்று சாராரின் கூற்றுகளில் இறுதிசாராரின் கூற்றுப்படி அந்நிய ஊரில் மரணமாகிய ஒருவருக்கு அவ்¥ரில் ஜனாஸா தொழுகை நடத்தப்படவில்லை என்று தெரிந்தால் மட்டுமே பிறர் மறைவான ஜனாஸா தொழுகை நடத்தக்கூடாது என்று கூறுவது முறையல்ல. காரணம் மேற்கண்டவாறு நபித்தோழர்களால் தொழவைத்து அடக்கம் செய்யப்பட்ட கப்ரின் அருகில் நின்று பிறரால் தொழவைக்கப்பட்ட மய்யித்துக்கே மீண்டும் நபி(ஸல்) அவர்கள் தொழவைத்துள்ளார்கள். இதன்படி தொழவைத்த மய்யித்துக்கு தொழவைப்பது ஆகும் என்பது தெளிவாகிறது.
ஆகவே உள்ளுரில் தொழவைத்து அடக்கம் செய்யப்பட்ட மய்யித்துக்கு பிறர் தொழவைத்து விட்டதால் மீண்டும் மற்றவர் தொழ வைப்பது கடமையில்லாவிடினும் மீண்டும் தொழவைப்பது ஆகுமாயிருப்பது போல், பிற ஊரில் மரணமாகிய ஒருவருக்கு அவ்¥ரார் தொழுகை நடத்தியருப்பதால் மற்ற ஊரார், அவருக்கு தொழுகை நடத்துவது கடமையில்லை என்றாலும் அவருக்காக அவர்கள் மறைவான ஜனாஸா தொழுகை நடத்தக்கூடாது என்பதற்கு போதிய சான்றுகள் இல்லை.
ஒருவரை அடக்கியபின், எத்தனை நாட்கள்வரை கப்ரு அருகில் நின்று ஜனாஸா தொழுகை நடத்துவது ஆகும்?
ஒரு நாள் நபி(ஸல்) அவர்கள் வெளியில் புறப்பட்டு, உயிருள்ளோர், மரித்தோர் ஆகியோரிடம் பயணம் கூறுபவர் போன்று 8 வருடங்களுக்குப் பின்னர் உஹதுடைய சஹாபாக்களுக்கு மய்யித்துக்குத் தொழவைப்பது போல் தொழுதார்கள். (உக்பத்துபின் ஆமிர்(ரழி) புகாரீ, நஸயீ)
அடக்கம் செய்யப்பட்ட மய்யித்துக்கு மூன்று தினங்கள் வரை, அல்லது கப்ருடைய ஈரம் காயும்வரை அல்லது ஒருமாதம் வரை, அல்லது மய்யித்தின் உடல் கெட்டுப்போகாமல் இருக்கும் வரை என்று பலரும் பலவாறு கூறுகிறார்கள். ஆனால் நபி(ஸல்) அவர்கள் 8 வருடத்திற்குப் பின்னர் கூட ஜனாஸா தொழுகை தொழுதிருப்பதாக ஸஹீஹான ஹதீஸ் புகாரீ, அபூதா¥த் போன்ற நூல்களில் காணப்படுகிறது.
இதற்குப் புறம்பாக மேற்கண்டவாறு குறிப்பிட்ட காலம் வரை என்று அதற்குக் கெடு கொடுப்பதுமின்றி, ''8 வருடங்களுக்குப்பின் மய்யித்துக்குத் தொழவைப்பது போல் தொழுதார்கள்'' என்று மிகத் தெளிவாக அவர்கள் தொழுதார்கள் என்று ஹதீஸில் இடம் பெற்றுள்ள வாசகத்திற்கு ''மய்யித்துக்கு துஆ செய்வது போல் துஆ செய்தார்கள்'' என்று தவறாக பொருள் செய்து கொள்வது.
ஆகவே மேற்காணும் ஹதீஸில் கண்டவாறு பல்லாண்டுகளுக்குப் பின்னரும் கப்ரில் நின்று ஜனாஸா தொழுகை நடத்துவது ஆகும் என்பதை அறிகிறோம்.
ஜனாஸா தொழுகையில் மக்கள் அதிகமாக கலந்து கொள்ளும் அளவு மய்யித்துக்கு நன்மையுண்டு:
''மய்யித்துக்கு பரிந்துரை செய்தவர்களாக 100 நபர்களைக் கொண்டதோர் முஸ்லிம்களின் கூட்டம் ஒரு மய்யித்துக்கு தொழுகை நடத்தும் போது நிச்சயமாக அல்லாஹ் அவர்களின் பரிந்துரையை ஏற்கிறான்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (ஆயிஷா(ரழி), முஸ்லிம், நஸயீ, திர்மிதீ)
''ஒரு முஸ்லிமாகிய மனிதர் மரணமாம், அவருடைய மய்யித்துக்கு அல்லாஹ்வுக்கு இணைவைக்காத நிலையிலுள்ளவர்கள் ஜனாஸா தொழுகை நடத்துவார்களானால் அல்லாஹ் அவர்களின் பரிந்துரையை ஏற்றுக் கொள்கிறான், என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
(இப்னு அப்பாஸ்(ரழி) முஸ்லிம், அபூதா¥த், அஹ்மத்)
''முஸ்லிமான ஒருவர் மரணமாம், அவருக்கு முஸ்லிம்களில் மூன்று ஸஃப்பு - அணிகள் ஜனாஸா தொழுவார்களானால் அவருக்கு நிச்சயமாக (நற்பதவி) கிடைத்துவிடும்'' என்று கூறியுள்ளார்கள். மாலிக்கு பின் ஹுபைரா(ரழி) அவர்கள் இந்த ஹதீஸ் அடிப்படையில் ஜனாஸா தொழுவோரை மூன்று அணிகளாக நிற்கும்படி செய்து கொண்டிருந்தார்கள். (மாலிக்கு பின் ஹுiபா(ரழி) அபூதா¥த், திர்மிதீ)
மூன்று நேரங்களில் மய்யித் தொழுகை நடத்துவது முறையல்ல.
மூன்று நேரங்களில் எங்களில் இறந்தவர்களுக்காக தொழவைப்பதை அல்லது அவர்களை அடக்கம் செய்வதை நபி(ஸல்) அவர்கள் தடுத்துள்ளார்கள். சூரியன் உதிக்கும்போது, அது உதித்து பிரகாசிக்கும்வரை, உச்சிப் பொழுதின் போது, சூரியன் சாயும் வரை, சூரிய அஸ்துமனத்தின் போது, அதுமுழுமையாக அஸ்தமிக்கும் வரை.
(உக்பத்துபின் ஆமீர்(ரழி) முஸ்லிம், அபூதா¥த், நஸயீ, திர்மிதீ, இப்னுமாஜ்ஜா)
மய்யித்தை அடக்கியவுடன், கப்ரு அருகில் நின்று அதற்காக துஆ செய்வது.
''நபி(ஸல்) அவர்கள் மய்யித்தை அடக்கி முடித்துவிட்டால், அதன் அருகில் நின்றுகொண்டு, உங்கள் சகோதரருக்காக பாவமன்னிப்புத் தேடுவதோடு, அவருக்கு உறுதிப்பாட்டைத் தரும்படி (அல்லாஹ்விடம்) பிரார்த்தனை செய்யுங்கள்''என்றும் கூறினார்கள். (உஸ்மான்(ரழி) அபூதா¥த், ஹாக்கிம்)
ஜனாஸா தொழுகை கடடைமயான தொழுகை கருத்தில் கொள்ளாமல் உபரித் தொழுகைகளில் ஜனாஸாத் தொழுகை என்பதை கருத்தில் கொண்டு ஜனாஸா தொழும் முறையை பேணி அதிகமதிகம் தொழுது நன்மையை பெற முயற்சிப்போமாக ஜனாஸாத் தொழுகை!