Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

28 September 2014

கர்ப்ப காலத்தில் "ஸ்கேன்" பரிசோதனையின் பங்களிப்பு

  • முதலில் ஸ்கேன் என்பது என்ன?
ஒரு பொருளை, ஒரு உடலை, ஒரு உறுப்பை ஆராய்ந்து பார்ப்பது ஸ்கேன்.  இந்த ஸ்கேனில், அல்ட்ரசவுண்டு ஸ்கேன், சி.டி ஸ்கேன், எம்.ஆர்.அய் ஸ்கேன் என்று பலவகை உண்டு. கர்ப்ப காலத்தில் நாம் உபயோகிப்பது அல்ட்ராசவுண்டு ஸ்கேன் மட்டுமே. மிகவும் அத்தியாவசியமானால் மட்டும் எம்.ஆர்.அய் ஸ்கேன் எடுப்பதுண்டு.

  • ஸ்கேன் எப்படி செய்யப் படுகிறது ?
ஒலி அலைகள் உடலுக்குள் செலுத்தப்பட்டு  அவை திரும்பிப்பெறப்படுகிறது. கண்ணாடியில் ஒளி பட்டு திரும்பும்போது உருவம் கிடைப்பது போல, அல்ட்ராசவுண்டு ஸ்கேனில் ஒலி அலைகள் உபயோகப்படுத்தபடுகிறது. இவை எக்ஸ்ரே போன்றது கிடையாது. எக்ஸ்ரே கர்ப்பகாலத்தில் முடிந்தவரைக்கும் தவிர்க்கப்படுகிறது. எக்ஸ்ரேயில் தீமைகள் உண்டு. ஆனால் அல்ட்டராசவுண்டு ஸ்கேனில் தீமைகள் கிடையாது.

  • ஸ்கேன் எப்பொழுது எடுக்க வேண்டும்? ஏன் எடுக்கவேண்டும்?

முதலில் ஏன் எடுக்க வேண்டும் என்று பார்ப்போம்.
முதல் மூன்று மாதங்களில் பெண் பரிசோதிப்பதின்
மூலமோ, சிறுநீர்ப்பரிசோதனை மூலமோ, குழந்தை நன்றாக
இருக்கிறதா, ஒன்றா அல்லது இரண்டா, வளர்ச்சி சரியாக
இருக்கிறதா? என்ற விஷயங்கள் தெரியாது. இவற்றை
கண்டுபிடிக்க ஸ்கேன்  அவசியமாகிறது. ஒன்றுமே பிரச்சனை
இல்லையென்றால், முதல்  கேன்11-14 வாரங்களில்
எடுக்கலாம். ஆனால் கர்ப்பமாயிருக்கும் பெண்ணிற்கு வயிறு
வலி அல்லது சிறிது  இரத்தபோக்கு ஏற்பட்டால்
உடனடியாக ஸ்கேன் எடுக்க வேண்டும். அது 6
வாரமாயிருந்தலும், 8 வாரமாகயிருந்தாலும்
பரவாயில்லை.

முதல் கர்ப்பம் டியூபில் தங்கியிருந்ததாகவோ, அல்லது அபார்ஷன் ஆகியது என்றாலும் அடுத்த கர்ப்பத்தில் சீக்கிரமே (கர்ப்பம் என்று கண்டுபிடித்தவுடனே ) ஸ்கேன் செய்து கொள்வது நல்லது.


மாதவிடாய் சரியாக மாதாமாதம் வராமல் இரண்டு மூன்று மாதத்திற்கு ஒருமுறை மாதவிடாய் ஆகிறவர்களும் சீக்கிரமே ஸ்கேன் எடுப்பது அவசியம். சீக்கிரமே எடுக்கும் ஸ்கேன் மூலம், டெலிவரி ( பிரசவ ) தேதியை சரியாக குறிக்க முடியும். சீக்கிரமே எடுக்கும் ஸ்கேனால் எந்தபிரச்சனையும் ஆகாது.
சீக்கிரமே எடுக்கும் ஸ்கேன் வயிறு வழியாக அல்லாமல்,
பிறப்புறுப்பு (VAGINAL SCAN) வழியாகவும் எடுக்க
வேண்டி இருக்கலாம். அதனாலும் ஒன்றும் பயமில்லை.
கர்ப்பத்திற்கு எந்தவிதமான கெடுதலும் ஆகாது.


சில சமயங்களில் முதல் மாதத்திலேயே இரண்டு, மூன்று

முறை ஸ்கேன் எடுக்க நேரிடலாம். உதாரணத்திற்கு முதல் முறை பார்க்கும் போது குழந்தையின் இதயத்துடிப்பு தெரியவில்லை என்றால் இரண்டு வாரம் கழித்து பார்க்க வேண்டியிருக்ககும். தொடர்ந்து சிறிது சிறிது இரத்தப்போக்கு  இருந்து கொண்டேயிருந்தால், குழந்தை நன்றாக இருக்கிறதா  என்று ஒவ்வொரு முறையும் ஸ்கேன் எடுக்க வேண்டி  இருக்கலாம். இவ்வாறு ஆரம்பத்திலேயே அடிக்கடி ஸ்கேன் எடுப்பதால் எந்தப் பிரச்சனையும் கிடையாது.

11முதல்14 வாரங்கள் வரை எடுக்கும்  ஸ்கேனில் குழந்தையின் முழு உருவத்தையும் பார்க்கலாம். தலை, முகம், கால், முதுகெலும்பு, இதயம், வயிறு என எல்லாவற்றையும் பார்க்க முடியும். ஆம் இந்த மாதத்திலேயே எல்லா உறுப்புகளும் வந்து விடும். அதன் பிறகு ஒவ்வொரு உறுப்பும் பெரிதாவதும், வேலை செய்ய முதிர்ச்சிஅடைவதும் நடக்கும். இந்த சமயத்தில் குழந்தையின் கழுத்துக்குப் பின்புறம் இருக்கும் தோலின் தடிமனை அளப்பார்கள். (NUCHEAL THICKNESS). இது அதிகமாக இருந்தால், குழந்தைக்கு சில குறைகள் இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம். அம்மாதிரி இருந்தால் இன்னும் சில இரத்த பரிசோதனைகள், உள்ளுக்குள் இருக்கும் குழந்தையினுடைய இரத்த பரிசோதனை ஆகியவை செய்ய நேரிடலாம்
.
DOWN’S SYNDROME  என்பது மரபணுக்கள் பாதிப்பினால் ஏற்படும் ஒரு நிலை. இதனால் பாதிக்கப்பட்டவர்கள், முகம் சற்று சீனாக்காரர்கள் போல் இருக்கும். கண்கள் குறுகி, மூக்கு சப்பையாக, நாக்கு தடித்து, கழுத்து சிறிதாக, மூளை வளர்ச்சி குறைந்து காணப்படுவார்கள். இந்த நிலையில் குழந்தையின் கழுத்து தோல் (NUCHEAL THICKNESS) தடித்து காணப்படும்.

  • அடுத்து எந்த மாதம் ஸ்கேன் எடுக்க வேண்டும் ?

20-22 வாரங்களில் எடுக்க வேண்டும்.
இது மிகவும் முக்கியமான ஸ்கேன். உடல் உறுப்புகள்
ஒவ்வொன்றையும் நன்றாக ஆராய இது சரியாண தருணம். இதற்கு முந்தைய ஸ்கேனில் உடல் உறுப்புகள் மிகவும் சிறியதாக இருப்பதால் அதனை ஆராய்வது கடினமாக இருக்கும். கடைசி சில வாரங்களில் (பிரசவ தேதி நெருங்கும் சமயத்தில்) எடுக்கும் போது குழந்தை மிகவும் பெரிதாக வளர்ந்து இருக்கும். நீர் குறைவாக இருக்கும். அந்த சமயத்தில் பார்ப்பதும் கஷ்டம்.
எனவே குழந்தைக்கு ஏதேனும் ஊனம், குறைபாடு இருக்கிறதா
என்று கண்டறிய 20-22 வாரங்களில் செய்யும் ஸ்கேனே தகுந்தது.
மேலும்  தீர்க்க முடியாத குறைபாடுகள் உள்ள குழந்தை இருக்கும்
பட்சத்தில், அபார்ஷன் செய்யவும் இந்த சமயத்தில் முடிய்ம். 20-22
வாரங்களில் எடுக்கும் ஸ்கேனை TARGETTED SCAN (அதாவது
குறைபாடுகள் இருக்கிறதா என்பதை குறிப்பாக கவனித்தல்) என்று
சொல்வார்கள்.

கர்ப்ப காலத்தில் ஒரே ஒரு ஸ்கேன் தான் என்னால் எடுக்க
முடியும் என்று யாராவது சொன்னால் அவர்களை இந்த மாதத்தில்
செய்து கொள்ளச் செய்வது நல்லது. 5 ஆம் மாதத்தில் (20 – 22
வாரங்களில்)  செய்யும் இந்த ஸ்கேன் மிக முக்கியமானது என்பதால்
சில விஷயங்களை கவனத்தில் கொள்வது நல்லது. இந்த ஸ்கேனை
நல்ல பெரிய மெஷின் வைத்து கர்ப்ப ஸ்கேன்கள் அதிகம் செய்யும்
அனுபவமுள்ள டாக்டரிடம் செய்து கொள்வது நல்லது. கட்டாயம்
படங்கள், ரிப்போர்ட்டுகள் வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும்.
அடுத்த ஸ்கேன் பிரசவ தேதிக்கு அருகாமையில் எடுத்தால் போதும்.

  • இந்த ஸ்கேன் எதற்காக பயன்படும்?

பிரசவ தேதிக்கு அருகாமையில் எடுக்கும் ஸ்கேன் குழந்தையின்
தலை கீழே இருக்கிறதா, குழந்தையின் எடை எவ்வளவு,
குழந்தையின் அசைவுகள் நன்றாக இருக்கிறதா?, குழந்தையைச்
சுற்றி இருக்கும் நீர் போதுமான அளவு இருக்கிறதா?
என்பவற்றைச் சொல்லும். இந்தத்தகவல்களை வைத்துக்கொண்டு
டாக்டர் எவ்வளவு நாள் காத்திருக்கலாம், தானே வலி எடுக்கும்
வரை பொறுத்திருக்கலாமா?

ஆபரேஷன் செய்ய வேண்யிருக்குமா என்று முடிவெடுப்பார்கள்.
சிலசமயங்களில், குழந்தையின் வளர்ச்சி குறைந்திருப்பதாக
சந்தேகம் வந்தாலோ, நீர் குறைவாக இருக்கிறது என்று
நினைத்தாலோ, குழந்தையின் அசைவு குறைவாக இருந்தாலோ, எந்த நேரத்தில் வேண்டுமானாலும் ஸ்கேன் எடுக்க வேண்டி வரலாம்.
கடைசி வாரங்களில் எடுக்கும் இந்த ஸ்கேனில் குழந்தைக்கு
குறைபாடுகள் இருந்தால் கண்டுபிடிப்பது கடினம். பிரசவ
தேதியும் எப்பொழுதுமே முதல் மூன்று மாதங்களில் செய்யும் ஸ்கேன் வைத்து நிர்ணயிக்கப்படுவது தான். கடைசி வாரங்களில் பிரசவ தேதியை மிகச்சரியாக நிர்ணயிக்கமுடியாது.

ஆகவே ஒவ்வொரு கால கட்டத்தில் எடுக்கும் ஸ்கேனுக்கு ஒவ்வொரு முக்கியத்துவம் உண்டு. ஸ்கேன்  என்பது  நிச்சயமாக  ஒரு  உபயோகமான பரிசோதனை. ஆனால் அது 100 % நம்பகூடியது அல்ல. ஸ்கேன் மூலம் குழந்தையின் மூளை வளர்ச்சி, கண் பார்வை, காது கேட்கும் திறன், சில தோல் வியாதிகள், சில இருதய வியாதிகள் மற்றும் சில வியாதிகளும் கண்டுபிடிக்க முடியாது. பார்க்கும் போது குழந்தை எந்த நிலையில் உள்ளது, என்ன மாதிரி ஸ்கேன் மிஷின் வைத்து பார்க்கிறோம், எந்த கால கட்டத்தில் பார்க்கிறோம் என்பதை பொறுத்து ரிசல்ட் மாறலாம்.





தற்­கா­லத்தில் எந்­தத்­து­றை­யிலும் புதிய தொழில்­நுட்­பங்கள் உள்­நு­ழைக்­கப்­பட்டு வேலைகள் திறம்­ப­டவும் துரி­த­மா­கவும் துல்­லி­ய­மா­கவும் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன. அந்த வகையில் மருத்­து­வத்­து­றையை பொறுத்த வரை­யிலும் பல்­வே­று­பட்ட நவீன யுக்­திகள் சிகிச்­சை­க­ளுக்கு பயன்­ப­டுத்­தப்­பட்டு வரு­கின்­றன.

பெண் நோயியல் சம்­பந்­த­மான பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு காண்­ப­தற்கு இவ்­வா­றான நவீன தொழில் நுட்ப உப­க­ர­ணங்கள், யுக்­திகள் மற்றும் பரி­சோ­த­னைகள் பயன்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றன.
அதில் முக்­கி­ய­மான பரி­சோ­தனை தற்­கா­லத்தில் பாவிக்­கப்­பட்டு வரும் ஸ்கேன் பரி­சோ­த­னை­யாகும். இது கர்ப்­பக்­கா­லத்­திலும் சரி பெண்­களின் கர்ப்­பப்பை சூல­கங்கள் தொடர்­பான பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு காண்­ப­திலும் சரி வைத்­திய நிபு­ணர்­க­ளுக்கு மிகவும் உத­வி­யாக உள்­ளன.

கர்ப்­பக்­கா­லத்தில் ஸ்கேன் பரி­சோ­தனை செய்­வதால் உண்­டாகும் நன்­மைகள், செய்­வதன் தேவை மற்றும் விளை­வுகள் பற்றி இங்கு ஆராய்வோம்.

கர்ப்­பக்­கா­லத்தில் சாதா­ரண ஸ்கேன் பரி­சோ­தனை (Ultra sound scan) செய்­வதால் தாய்க்கோ சிசு­வுக்கோ எந்­த­வித சிக்­கல்­களும் ஏற்­ப­ட­மாட்­டாது. கர்ப்­பக்­கா­லத்தில் எந்­த­வொரு மாதத்­திலும் அதா­வது முதல் மாதம் தொடக்கம் இறுதி மாதம் வரைக்கும் தேவைக்­கேற்ற வகையில் எவ்­வித தயக்­கமும் இன்றி ஸ்கேன் பரி­சோ­தனை செய்ய முடியும். இப்­ப­ரி­சோ­தனை மூலம் வயிற்றில் உள்ள கருவின் ஆரோக்­கியம், அதன் சரி­யான திகதி, சிசுவின் வளர்ச்சி முறைகள், சிசுவின் வளர்ச்­சிக்­ குறை­பா­டுகள், சிசு இருக்கும் விதம், அங்­க­வீ­னக்­கு­றை­பா­டுகள், சிசுக்­களின் எண்­ணிக்கை மற்றும் தொப்புள், நச்­சுக்­கொடி இருக்கும் விதம் எனப்­பல விட­யங்­களை அறிந்து அவற்­றுக்­கான சரி­யான சிகிச்­சை­களை சரி­யா­கத்­ திட்­ட­மிட்டு சிறந்த கர்ப்­பக்­கால பரா­ம­ரிப்பை வழங்­கக்­கூ­டி­ய­தாக உள்­ளது. இதன்­மூலம் ஆரோக்­கி­ய­மான சிறந்த குழந்­தையை பெற்­றெ­டுக்க முடியும்.

கர்ப்­பக்­கா­லத்தில் ஸ்கேன் பரி­சோ­த­னை­யா­னது பல்­வே­று­பட்ட நிலை­களில் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றது. இது 3ஆம் மாதம், 5ஆம் மாதம், 8ஆம் மாதம் என பல்­வே­று­பட்ட காலப்­ப­கு­தி­க­ளிலும் தேவை­யேற்­படும் சந்­தர்ப்­பங்­களில் இடை­யி­டை­யேயும் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றது.

ஆரம்ப கர்ப்­பக்­கா­லத்தில் அதா­வது முதல் மூன்று மாதங்­களில் செய்­யப்­படும் ஸ்கேன் பரி­சோ­த­னையின் நோக்கம்

ஆரம்ப கர்ப்­பக்­கா­லத்தில் அதா­வது முதல் மூன்று மாதங்­களுள் செய்­யப்­படும் ஸ்கேன் பரி­சோ­த­னையில் பல முக்­கிய விட­யங்கள் அறி­யப்­படும். அதா­வது கரு­வா­னது கர்ப்­பப்­பையின் உள்ளே சரி­யான இடத்தில் தங்கி உள்­ளது உறு­திப்­ப­டுத்­தப்­படும். அத்­துடன் கரு­வா­னது ஆரோக்­கி­ய­மாக உள்­ளதா என்­ப­தையும் அறி­வ­துடன் எத்­தனை கருக்கள் உள்­ளன என்­ப­தையும் அறிய முடியும்.
அத்­துடன் இந்த ஸ்கேன் பரி­சோ­த­னையின் போதுதான் சிசுவின் பரு­மனை அளந்து சரி­யான பிர­சவ எதிர்­பார்ப்பு திக­தியைக் குறிப்­பி­டலாம்.
இவ்­வாறு சில பெண்கள் இறு­தி­யாக மாத­விடாய் வந்த திக­தியை மறந்­தி­ருந்தால் சரி­யான பிர­சவ எதிர்­பார்ப்பு திக­தியை முதல் மூன்று மாதங்­களில் செய்­யப்­படும் ஸ்கேன் மூலம் தான் சரி­யாக கண்­ட­றிய முடியும்.

அதற்கு பிந்­திய மாதங்­களில் ஸ்கேன் செய்து இவ்­வாறு திக­தியை சரி­யாக கணிப்­பிட முடி­யாது. அத்­துடன் முதல் 3 மாதங்­களில் செய்­யப்­படும் ஸ்கேனில்தான் பெண்­களின் கர்ப்­பப்­பையில் உள்ள பைப்பு­ரோயிட் கட்­டிகள் மற்றும் சூல­கத்தில் உள்ள சூல­கக்­கட்­டிகள் பற்­றிய தக­வல்­களை அறிய முடியும்.

கர்ப்­பக்­கா­லத்தில் சிசுவின் அங்­க­வீனக் குறை­பா­டு­களை கண்­ட­றிய மேற்­கொள்­ளப்­படும் ஸ்கேன் பரி­சோ­தனை

சிசு முழு­மை­யாக விருத்­தி­ய­டைந்து சகல பாகங்­களும் உரு­வான பின்னர் சிசுவின் உறுப்­புக்­களில் ஏதா­வது குறைகள் இருக்­கின்­றதா என ஸ்கேனில் அறிய முடியும். இவ்­வாறு அங்­க­வீ­னக்­ குறை­பா­டு­களை அறியும் ஸ்கேன் 5 மாத கர்ப்­பக்­கா­லத்தில் அதா­வது 18-20 வாரங்­களில் செய்ய முடியும். இதன்­போது சிசுவின் தலை, மூளை, முதுகு, நெஞ்சு, வயிறு, இரு­தயம், கால்கள் என பிர­தான உறுப்­புக்­களில் குறைகள் இருப்­ப­தனை அறிய முடியும்.

இவ்­வா­றான ஸ்கேன் பரி­சோ­தனை குறிப்­பாக பெண்­களில் நீரி­ழிவு நோய், காக்கை வலிப்பு, இரு­தய நோய் உள்ள போதும் மற்றும் சொந்த உற­வு­களில் திரு­மணம் செய்­து­கொண்­ட­வர்­க­ளிலும் ஆரம்ப கர்ப்ப காலத்தில் சரி­யாக போலிக் அசிட் (Folic acid) விட்டமின் மாத்­தி­ரை­களை எடுக்­கா­த­வர்­க­ளிலும் மேலும் ஆரம்ப கர்ப்ப காலத்தில் வேண்­டப்­ப­டாத மாத்­தி­ரை­களை உட்­கொண்­ட­வர்­க­ளிலும் இவ்­வா­றான அங்­க­வீன குறை­களை கண்­ட­றியும் ஸ்கேன் அவ­சியம். ஏனெனில் மேற்­கு­றிப்­பிட்­ட­வர்­களில் சிசுவில் சில குறைகள் வரு­வ­தற்கு சிறிய வாய்ப்­புக்கள் உள்­ளன. அத்­துடன் 35 வய­துக்கு மேற்­பட்ட பெண்கள் கர்ப்பம் தரிக்கும் போதும் இது­போன்ற ஸ்கேன் பரி­சோ­தனை அவ­சியம்.

நிற­மூர்த்த குறை­பாட்டால் ஏற்­படும் டவுன்ஸ் குழந்­தை­களை (Down's syndrome) கண்­ட­றியும் ஸ்கேன் பரி­சோ­தனை

முதல் மூன்று மாதத்தில் செய்­யப்­படும் ஸ்கேனில் சிசுவின் கழுத்தில் பிற்­ப­கு­தியின் தடிப்பை அளந்து இதில் சற்றுக் கூடு­த­லாக தடிப்­ப­டைந்­தி­ருந்தால் டவுன்ஸ் வியாதி குறித்து சந்­தேகம் கொள்ள முடியும். அத்­துடன் சிசுவின் மூக்கின் எலும்பு விருத்­தி­ய­டை­யாத தன்­மை­யையும் பார்க்க முடியும். இவ்­வாறு டவுன்ஸ் சிசு குறித்து சந்­தேகம் இருந்தால் இதனை உறு­திப்­ப­டுத்த மேலும் சில பரி­சோ­த­னை­க­ளாக இரத்­தப்­ப­ரி­சோ­தனை மற்றும் சிசுவின் நிற­மூர்த்தப் பரி­சோ­தனை என்­பன செய்ய முடியும். இதன்­மூலம் இவ ற்றை உறு­திப்­ப­டுத்­தலாம்.

பிந்­திய கர்ப்­ப­காலத் தில் (8ஆம் ­மாதம்) செய்­யப்­படும் ஸ்கேன் பரி­சோதனை

8 மாதங்களில் செய் யப்படும் ஸ்கேன் பரி சோதனையில் சிசுவின் வளர்ச்சியை அறிய முடியும்.இதன் மூலம் சிசுவில் வளர்ச்சிக் குறைகள் இருப்பின் சிசுவை முன்கூட்டியே பிரசவிக்க முடியும். மேலும் இவ்வாறு எட்டு மாதங்களில் செய்யப்படும் ஸ்கேன் மூலம் சிசு இருக்கும் விதம், தொப்புள் நச்சுக்கொடி அமைந்திருக்கும் விதம் என் பவற்றை அறியலாம்.
இவ்வாறு ஸ்கேன் பரிசோதனை கர்ப்பக் காலத்தின் வெவ்வேறு கால கட்டத்தில் செய்யப்படும்.இதன் மூலம் பலவித தகவல்களை பெற முடியும்.

Popular Posts

FACEBOOK COMMENTS BOX