- முதலில் ஸ்கேன் என்பது என்ன?
- ஸ்கேன் எப்படி செய்யப் படுகிறது ?
- ஸ்கேன் எப்பொழுது எடுக்க வேண்டும்? ஏன் எடுக்கவேண்டும்?
முதலில் ஏன் எடுக்க வேண்டும் என்று பார்ப்போம்.
முதல் மூன்று மாதங்களில் பெண் பரிசோதிப்பதின்
மூலமோ, சிறுநீர்ப்பரிசோதனை மூலமோ, குழந்தை நன்றாக
இருக்கிறதா, ஒன்றா அல்லது இரண்டா, வளர்ச்சி சரியாக
இருக்கிறதா? என்ற விஷயங்கள் தெரியாது. இவற்றை
கண்டுபிடிக்க ஸ்கேன் அவசியமாகிறது. ஒன்றுமே பிரச்சனை
இல்லையென்றால், முதல் கேன்11-14 வாரங்களில்
எடுக்கலாம். ஆனால் கர்ப்பமாயிருக்கும் பெண்ணிற்கு வயிறு
வலி அல்லது சிறிது இரத்தபோக்கு ஏற்பட்டால்
உடனடியாக ஸ்கேன் எடுக்க வேண்டும். அது 6
வாரமாயிருந்தலும், 8 வாரமாகயிருந்தாலும்
பரவாயில்லை.
முதல் கர்ப்பம் டியூபில் தங்கியிருந்ததாகவோ, அல்லது அபார்ஷன் ஆகியது என்றாலும் அடுத்த கர்ப்பத்தில் சீக்கிரமே (கர்ப்பம் என்று கண்டுபிடித்தவுடனே ) ஸ்கேன் செய்து கொள்வது நல்லது.
மாதவிடாய் சரியாக மாதாமாதம் வராமல் இரண்டு மூன்று மாதத்திற்கு ஒருமுறை மாதவிடாய் ஆகிறவர்களும் சீக்கிரமே ஸ்கேன் எடுப்பது அவசியம். சீக்கிரமே எடுக்கும் ஸ்கேன் மூலம், டெலிவரி ( பிரசவ ) தேதியை சரியாக குறிக்க முடியும். சீக்கிரமே எடுக்கும் ஸ்கேனால் எந்தபிரச்சனையும் ஆகாது.
சீக்கிரமே எடுக்கும் ஸ்கேன் வயிறு வழியாக அல்லாமல்,
பிறப்புறுப்பு (VAGINAL SCAN) வழியாகவும் எடுக்க
வேண்டி இருக்கலாம். அதனாலும் ஒன்றும் பயமில்லை.
கர்ப்பத்திற்கு எந்தவிதமான கெடுதலும் ஆகாது.
சில சமயங்களில் முதல் மாதத்திலேயே இரண்டு, மூன்று
முறை ஸ்கேன் எடுக்க நேரிடலாம். உதாரணத்திற்கு முதல் முறை பார்க்கும் போது குழந்தையின் இதயத்துடிப்பு தெரியவில்லை என்றால் இரண்டு வாரம் கழித்து பார்க்க வேண்டியிருக்ககும். தொடர்ந்து சிறிது சிறிது இரத்தப்போக்கு இருந்து கொண்டேயிருந்தால், குழந்தை நன்றாக இருக்கிறதா என்று ஒவ்வொரு முறையும் ஸ்கேன் எடுக்க வேண்டி இருக்கலாம். இவ்வாறு ஆரம்பத்திலேயே அடிக்கடி ஸ்கேன் எடுப்பதால் எந்தப் பிரச்சனையும் கிடையாது.
11முதல்14 வாரங்கள் வரை எடுக்கும் ஸ்கேனில் குழந்தையின் முழு உருவத்தையும் பார்க்கலாம். தலை, முகம், கால், முதுகெலும்பு, இதயம், வயிறு என எல்லாவற்றையும் பார்க்க முடியும். ஆம் இந்த மாதத்திலேயே எல்லா உறுப்புகளும் வந்து விடும். அதன் பிறகு ஒவ்வொரு உறுப்பும் பெரிதாவதும், வேலை செய்ய முதிர்ச்சிஅடைவதும் நடக்கும். இந்த சமயத்தில் குழந்தையின் கழுத்துக்குப் பின்புறம் இருக்கும் தோலின் தடிமனை அளப்பார்கள். (NUCHEAL THICKNESS). இது அதிகமாக இருந்தால், குழந்தைக்கு சில குறைகள் இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம். அம்மாதிரி இருந்தால் இன்னும் சில இரத்த பரிசோதனைகள், உள்ளுக்குள் இருக்கும் குழந்தையினுடைய இரத்த பரிசோதனை ஆகியவை செய்ய நேரிடலாம்
.
DOWN’S SYNDROME என்பது மரபணுக்கள் பாதிப்பினால் ஏற்படும் ஒரு நிலை. இதனால் பாதிக்கப்பட்டவர்கள், முகம் சற்று சீனாக்காரர்கள் போல் இருக்கும். கண்கள் குறுகி, மூக்கு சப்பையாக, நாக்கு தடித்து, கழுத்து சிறிதாக, மூளை வளர்ச்சி குறைந்து காணப்படுவார்கள். இந்த நிலையில் குழந்தையின் கழுத்து தோல் (NUCHEAL THICKNESS) தடித்து காணப்படும்.
- அடுத்து எந்த மாதம் ஸ்கேன் எடுக்க வேண்டும் ?
20-22 வாரங்களில் எடுக்க வேண்டும்.
இது மிகவும் முக்கியமான ஸ்கேன். உடல் உறுப்புகள்
ஒவ்வொன்றையும் நன்றாக ஆராய இது சரியாண தருணம். இதற்கு முந்தைய ஸ்கேனில் உடல் உறுப்புகள் மிகவும் சிறியதாக இருப்பதால் அதனை ஆராய்வது கடினமாக இருக்கும். கடைசி சில வாரங்களில் (பிரசவ தேதி நெருங்கும் சமயத்தில்) எடுக்கும் போது குழந்தை மிகவும் பெரிதாக வளர்ந்து இருக்கும். நீர் குறைவாக இருக்கும். அந்த சமயத்தில் பார்ப்பதும் கஷ்டம்.
எனவே குழந்தைக்கு ஏதேனும் ஊனம், குறைபாடு இருக்கிறதா
என்று கண்டறிய 20-22 வாரங்களில் செய்யும் ஸ்கேனே தகுந்தது.
மேலும் தீர்க்க முடியாத குறைபாடுகள் உள்ள குழந்தை இருக்கும்
பட்சத்தில், அபார்ஷன் செய்யவும் இந்த சமயத்தில் முடிய்ம். 20-22
வாரங்களில் எடுக்கும் ஸ்கேனை TARGETTED SCAN (அதாவது
குறைபாடுகள் இருக்கிறதா என்பதை குறிப்பாக கவனித்தல்) என்று
சொல்வார்கள்.
கர்ப்ப காலத்தில் ஒரே ஒரு ஸ்கேன் தான் என்னால் எடுக்க
முடியும் என்று யாராவது சொன்னால் அவர்களை இந்த மாதத்தில்
செய்து கொள்ளச் செய்வது நல்லது. 5 ஆம் மாதத்தில் (20 – 22
வாரங்களில்) செய்யும் இந்த ஸ்கேன் மிக முக்கியமானது என்பதால்
சில விஷயங்களை கவனத்தில் கொள்வது நல்லது. இந்த ஸ்கேனை
நல்ல பெரிய மெஷின் வைத்து கர்ப்ப ஸ்கேன்கள் அதிகம் செய்யும்
அனுபவமுள்ள டாக்டரிடம் செய்து கொள்வது நல்லது. கட்டாயம்
படங்கள், ரிப்போர்ட்டுகள் வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும்.
அடுத்த ஸ்கேன் பிரசவ தேதிக்கு அருகாமையில் எடுத்தால் போதும்.
- இந்த ஸ்கேன் எதற்காக பயன்படும்?
தலை கீழே இருக்கிறதா, குழந்தையின் எடை எவ்வளவு,
குழந்தையின் அசைவுகள் நன்றாக இருக்கிறதா?, குழந்தையைச்
சுற்றி இருக்கும் நீர் போதுமான அளவு இருக்கிறதா?
என்பவற்றைச் சொல்லும். இந்தத்தகவல்களை வைத்துக்கொண்டு
டாக்டர் எவ்வளவு நாள் காத்திருக்கலாம், தானே வலி எடுக்கும்
வரை பொறுத்திருக்கலாமா?
ஆபரேஷன் செய்ய வேண்யிருக்குமா என்று முடிவெடுப்பார்கள்.
சிலசமயங்களில், குழந்தையின் வளர்ச்சி குறைந்திருப்பதாக
சந்தேகம் வந்தாலோ, நீர் குறைவாக இருக்கிறது என்று
நினைத்தாலோ, குழந்தையின் அசைவு குறைவாக இருந்தாலோ, எந்த நேரத்தில் வேண்டுமானாலும் ஸ்கேன் எடுக்க வேண்டி வரலாம்.
கடைசி வாரங்களில் எடுக்கும் இந்த ஸ்கேனில் குழந்தைக்கு
குறைபாடுகள் இருந்தால் கண்டுபிடிப்பது கடினம். பிரசவ
தேதியும் எப்பொழுதுமே முதல் மூன்று மாதங்களில் செய்யும் ஸ்கேன் வைத்து நிர்ணயிக்கப்படுவது தான். கடைசி வாரங்களில் பிரசவ தேதியை மிகச்சரியாக நிர்ணயிக்கமுடியாது.
ஆகவே ஒவ்வொரு கால கட்டத்தில் எடுக்கும் ஸ்கேனுக்கு ஒவ்வொரு முக்கியத்துவம் உண்டு. ஸ்கேன் என்பது நிச்சயமாக ஒரு உபயோகமான பரிசோதனை. ஆனால் அது 100 % நம்பகூடியது அல்ல. ஸ்கேன் மூலம் குழந்தையின் மூளை வளர்ச்சி, கண் பார்வை, காது கேட்கும் திறன், சில தோல் வியாதிகள், சில இருதய வியாதிகள் மற்றும் சில வியாதிகளும் கண்டுபிடிக்க முடியாது. பார்க்கும் போது குழந்தை எந்த நிலையில் உள்ளது, என்ன மாதிரி ஸ்கேன் மிஷின் வைத்து பார்க்கிறோம், எந்த கால கட்டத்தில் பார்க்கிறோம் என்பதை பொறுத்து ரிசல்ட் மாறலாம்.
தற்காலத்தில் எந்தத்துறையிலும் புதிய தொழில்நுட்பங்கள் உள்நுழைக்கப்பட்டு வேலைகள் திறம்படவும் துரிதமாகவும் துல்லியமாகவும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் மருத்துவத்துறையை பொறுத்த வரையிலும் பல்வேறுபட்ட நவீன யுக்திகள் சிகிச்சைகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
பெண் நோயியல் சம்பந்தமான பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு இவ்வாறான நவீன தொழில் நுட்ப உபகரணங்கள், யுக்திகள் மற்றும் பரிசோதனைகள் பயன்படுத்தப்படுகின்றன.
அதில் முக்கியமான பரிசோதனை தற்காலத்தில் பாவிக்கப்பட்டு வரும் ஸ்கேன் பரிசோதனையாகும். இது கர்ப்பக்காலத்திலும் சரி பெண்களின் கர்ப்பப்பை சூலகங்கள் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதிலும் சரி வைத்திய நிபுணர்களுக்கு மிகவும் உதவியாக உள்ளன.
கர்ப்பக்காலத்தில் ஸ்கேன் பரிசோதனை செய்வதால் உண்டாகும் நன்மைகள், செய்வதன் தேவை மற்றும் விளைவுகள் பற்றி இங்கு ஆராய்வோம்.
கர்ப்பக்காலத்தில் சாதாரண ஸ்கேன் பரிசோதனை (Ultra sound scan) செய்வதால் தாய்க்கோ சிசுவுக்கோ எந்தவித சிக்கல்களும் ஏற்படமாட்டாது. கர்ப்பக்காலத்தில் எந்தவொரு மாதத்திலும் அதாவது முதல் மாதம் தொடக்கம் இறுதி மாதம் வரைக்கும் தேவைக்கேற்ற வகையில் எவ்வித தயக்கமும் இன்றி ஸ்கேன் பரிசோதனை செய்ய முடியும். இப்பரிசோதனை மூலம் வயிற்றில் உள்ள கருவின் ஆரோக்கியம், அதன் சரியான திகதி, சிசுவின் வளர்ச்சி முறைகள், சிசுவின் வளர்ச்சிக் குறைபாடுகள், சிசு இருக்கும் விதம், அங்கவீனக்குறைபாடுகள், சிசுக்களின் எண்ணிக்கை மற்றும் தொப்புள், நச்சுக்கொடி இருக்கும் விதம் எனப்பல விடயங்களை அறிந்து அவற்றுக்கான சரியான சிகிச்சைகளை சரியாகத் திட்டமிட்டு சிறந்த கர்ப்பக்கால பராமரிப்பை வழங்கக்கூடியதாக உள்ளது. இதன்மூலம் ஆரோக்கியமான சிறந்த குழந்தையை பெற்றெடுக்க முடியும்.
கர்ப்பக்காலத்தில் ஸ்கேன் பரிசோதனையானது பல்வேறுபட்ட நிலைகளில் மேற்கொள்ளப்படுகின்றது. இது 3ஆம் மாதம், 5ஆம் மாதம், 8ஆம் மாதம் என பல்வேறுபட்ட காலப்பகுதிகளிலும் தேவையேற்படும் சந்தர்ப்பங்களில் இடையிடையேயும் மேற்கொள்ளப்படுகின்றது.
ஆரம்ப கர்ப்பக்காலத்தில் அதாவது முதல் மூன்று மாதங்களில் செய்யப்படும் ஸ்கேன் பரிசோதனையின் நோக்கம்
ஆரம்ப கர்ப்பக்காலத்தில் அதாவது முதல் மூன்று மாதங்களுள் செய்யப்படும் ஸ்கேன் பரிசோதனையில் பல முக்கிய விடயங்கள் அறியப்படும். அதாவது கருவானது கர்ப்பப்பையின் உள்ளே சரியான இடத்தில் தங்கி உள்ளது உறுதிப்படுத்தப்படும். அத்துடன் கருவானது ஆரோக்கியமாக உள்ளதா என்பதையும் அறிவதுடன் எத்தனை கருக்கள் உள்ளன என்பதையும் அறிய முடியும்.
அத்துடன் இந்த ஸ்கேன் பரிசோதனையின் போதுதான் சிசுவின் பருமனை அளந்து சரியான பிரசவ எதிர்பார்ப்பு திகதியைக் குறிப்பிடலாம்.
இவ்வாறு சில பெண்கள் இறுதியாக மாதவிடாய் வந்த திகதியை மறந்திருந்தால் சரியான பிரசவ எதிர்பார்ப்பு திகதியை முதல் மூன்று மாதங்களில் செய்யப்படும் ஸ்கேன் மூலம் தான் சரியாக கண்டறிய முடியும்.
அதற்கு பிந்திய மாதங்களில் ஸ்கேன் செய்து இவ்வாறு திகதியை சரியாக கணிப்பிட முடியாது. அத்துடன் முதல் 3 மாதங்களில் செய்யப்படும் ஸ்கேனில்தான் பெண்களின் கர்ப்பப்பையில் உள்ள பைப்புரோயிட் கட்டிகள் மற்றும் சூலகத்தில் உள்ள சூலகக்கட்டிகள் பற்றிய தகவல்களை அறிய முடியும்.
கர்ப்பக்காலத்தில் சிசுவின் அங்கவீனக் குறைபாடுகளை கண்டறிய மேற்கொள்ளப்படும் ஸ்கேன் பரிசோதனை
சிசு முழுமையாக விருத்தியடைந்து சகல பாகங்களும் உருவான பின்னர் சிசுவின் உறுப்புக்களில் ஏதாவது குறைகள் இருக்கின்றதா என ஸ்கேனில் அறிய முடியும். இவ்வாறு அங்கவீனக் குறைபாடுகளை அறியும் ஸ்கேன் 5 மாத கர்ப்பக்காலத்தில் அதாவது 18-20 வாரங்களில் செய்ய முடியும். இதன்போது சிசுவின் தலை, மூளை, முதுகு, நெஞ்சு, வயிறு, இருதயம், கால்கள் என பிரதான உறுப்புக்களில் குறைகள் இருப்பதனை அறிய முடியும்.
இவ்வாறான ஸ்கேன் பரிசோதனை குறிப்பாக பெண்களில் நீரிழிவு நோய், காக்கை வலிப்பு, இருதய நோய் உள்ள போதும் மற்றும் சொந்த உறவுகளில் திருமணம் செய்துகொண்டவர்களிலும் ஆரம்ப கர்ப்ப காலத்தில் சரியாக போலிக் அசிட் (Folic acid) விட்டமின் மாத்திரைகளை எடுக்காதவர்களிலும் மேலும் ஆரம்ப கர்ப்ப காலத்தில் வேண்டப்படாத மாத்திரைகளை உட்கொண்டவர்களிலும் இவ்வாறான அங்கவீன குறைகளை கண்டறியும் ஸ்கேன் அவசியம். ஏனெனில் மேற்குறிப்பிட்டவர்களில் சிசுவில் சில குறைகள் வருவதற்கு சிறிய வாய்ப்புக்கள் உள்ளன. அத்துடன் 35 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் கர்ப்பம் தரிக்கும் போதும் இதுபோன்ற ஸ்கேன் பரிசோதனை அவசியம்.
நிறமூர்த்த குறைபாட்டால் ஏற்படும் டவுன்ஸ் குழந்தைகளை (Down's syndrome) கண்டறியும் ஸ்கேன் பரிசோதனை
முதல் மூன்று மாதத்தில் செய்யப்படும் ஸ்கேனில் சிசுவின் கழுத்தில் பிற்பகுதியின் தடிப்பை அளந்து இதில் சற்றுக் கூடுதலாக தடிப்படைந்திருந்தால் டவுன்ஸ் வியாதி குறித்து சந்தேகம் கொள்ள முடியும். அத்துடன் சிசுவின் மூக்கின் எலும்பு விருத்தியடையாத தன்மையையும் பார்க்க முடியும். இவ்வாறு டவுன்ஸ் சிசு குறித்து சந்தேகம் இருந்தால் இதனை உறுதிப்படுத்த மேலும் சில பரிசோதனைகளாக இரத்தப்பரிசோதனை மற்றும் சிசுவின் நிறமூர்த்தப் பரிசோதனை என்பன செய்ய முடியும். இதன்மூலம் இவ ற்றை உறுதிப்படுத்தலாம்.
பிந்திய கர்ப்பகாலத் தில் (8ஆம் மாதம்) செய்யப்படும் ஸ்கேன் பரிசோதனை
8 மாதங்களில் செய் யப்படும் ஸ்கேன் பரி சோதனையில் சிசுவின் வளர்ச்சியை அறிய முடியும்.இதன் மூலம் சிசுவில் வளர்ச்சிக் குறைகள் இருப்பின் சிசுவை முன்கூட்டியே பிரசவிக்க முடியும். மேலும் இவ்வாறு எட்டு மாதங்களில் செய்யப்படும் ஸ்கேன் மூலம் சிசு இருக்கும் விதம், தொப்புள் நச்சுக்கொடி அமைந்திருக்கும் விதம் என் பவற்றை அறியலாம்.
இவ்வாறு ஸ்கேன் பரிசோதனை கர்ப்பக் காலத்தின் வெவ்வேறு கால கட்டத்தில் செய்யப்படும்.இதன் மூலம் பலவித தகவல்களை பெற முடியும்.