
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காதுஹூ
. 1521 – حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِى شَيْبَةَ حَدَّثَنَا أَبُو الأَحْوَصِ عَنْ إِبْرَاهِيمَ بْنِ الْمُهَاجِرِ عَنْ أَبِى الشَّعْثَاءِ قَالَ كُنَّا قُعُودًا فِى الْمَسْجِدِ مَعَ أَبِى هُرَيْرَةَ فَأَذَّنَ الْمُؤَذِّنُ فَقَامَ رَجُلٌ مِنَ الْمَسْجِدِ يَمْشِى فَأَتْبَعَهُ أَبُو هُرَيْرَةَ بَصَرَهُ حَتَّى خَرَجَ مِنَ الْمَسْجِدِ فَقَالَ أَبُو هُرَيْرَةَ أَمَّا هَذَا فَقَدْ عَصَى أَبَا الْقَاسِمِ -صلى الله عليه وسلم-..مسلم
நாங்கள் அபூஹுரைரா(ரலி)யுடன் பள்ளியில் அமர்ந்திருந்தோம் அப்போது முஅத் தின் பாங்கு கூறினார், ஒரு மனிதர் பள்ளியிலிருந்து எழுந்து நடந்து சென்றார், அபூ ஹுரைரா (ரலி) அவரின் பக்கமாக தனது பார்வை செலுத்தினார்கள், அவர் பள்ளியி லிருந்து வெளியேறி வெளியேறி விட்டார், அப்போது அபூஹுரைரா (ரலி) அவர்கள் இவர் அபுல் காசிம் (ஸல்) அவர்களுக்கு மாறுசெய்துவிட்டார் என்று கூறியதாக அபூ ஷஅதா(ரலி) கூறினார்கள். நூல்: முஸ்லிம், 1521
2. பள்ளியில் சப்தமிட்டு பேசாமலிருப்பது, அங்கு தர்க்கித்துக் கொள்ளாமலிருப்பது
470- حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللهِ ، قَالَ : حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ قَالَ : حَدَّثَنَا الْجُعَيْدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ ، قَالَ : حَدَّثَنِي يَزِيدُ بْنُ خُصَيْفَةَ ، عَنِ السَّائِبِ بْنِ يَزِيدَ قَالَ : كُنْتُ قَائِمًا فِي الْمَسْجِدِ فَحَصَبَنِي رَجُلٌ فَنَظَرْتُ فَإِذَا عُمَرُ بْنُ الْخَطَّابِ فَقَالَ اذْهَبْ فَأْتِنِي بِهَذَيْنِ فَجِئْتُهُ بِهِمَا قَالَ مَنْ أَنْتُمَا ، أَوْ مِنْ أَيْنَ أَنْتُمَا قَالاَ مِنْ أَهْلِ الطَّائِفِ قَالَ لَوْ كُنْتُمَا مِنْ أَهْلِ الْبَلَدِ لأَوْجَعْتُكُمَا تَرْفَعَانِ أَصْوَاتَكُمَا فِي مَسْجِدِ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم. بخاري
நான் பள்ளியில் நின்றுகொண்டிருந்தேன் அப்போது ஒருவர் என்னை கல்லால் அடித் தார், அப்போது உமர் பின் கத்தாப் அவர்களை அங்கு கண்டேன், நீ சென்று அந்த இருவரையும் என்னிடம் கொண்டு வா என்று என்னிடம் கூறினார்கள், அவர்கள் இரு வரையும் அவரிடம் கொண்டு வந்தேன், அவர், அவர்கள் அவ்விருவரிடமும் நீங்கள் இருவரும் யார்? அல்லது எங்கிருந்து வருகிறீர்கள் என்று கேட்டார், அவர்கள் இரு வரும் நாங்கள் தாயிபில் இருந்து வருகிறோம் என்று கூறினார், நீங்கள் இருவரும் இந்த ஊர்வாசிகளாக இருந்திருந்தால் உங்கள் இருவரையும் காயப்படுத்தியிருப்பேன், அல்லாஹ்வின் தூதருடைய பள்ளியில் உங்கள் இருவரின் சப்தத்தை உயர்த்துகிறீர் களா?! என்று யஸீத் பின் சாயிப் கூறினார். புகாரி 470 .
3 விற்பதையும் வாங்குவதையும் தவிர்க்க வேண்டும்
1081 – حَدَّثَنَا مُسَدَّدٌ حَدَّثَنَا يَحْيَى عَنِ ابْنِ عَجْلاَنَ عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ أَنَّ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- نَهَى عَنِ الشِّرَاءِ وَالْبَيْعِ فِى الْمَسْجِدِ وَأَنْ تُنْشَدَ فِيهِ ضَالَّةٌ وَأَنْ يُنْشَدَ فِيهِ شِعْرٌ وَنَهَى عَنِ التَّحَلُّقِ قَبْلَ الصَّلاَةِ يَوْمَ الْجُمُعَةِ.ابو داود
நிச்சயமாக அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் பள்ளியில் விற்பதையும் வாங்கு வதையும், தவறிப்போனவற்றைத் தேடுவதையும், ஜூம்ஆ தொழுகைக்கு முன்னர் வட்டமாக அமர்வதையும் தடை செய்துள்ளார்கள் என்று ஷூஐப் பின் அம்ர் கூறினார், நூல்: அபூ தாவூத் 1081.
4. பள்ளியை சுத்தமாக வைத்துக் கொள்வதில் கவனம் செலுத்த வேண்டும்
415- حَدَّثَنَا آدَمُ قَالَ : حَدَّثَنَا شُعْبَةُ قَالَ : حَدَّثَنَا قَتَادَةُ قَالَ : سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ قَالَ : قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم الْبُزَاقُ فِي الْمَسْجِدِ خَطِيئَةٌ وَكَفَّارَتُهَا دَفْنُهَا.مسلم
பள்ளியில் காரி உமிழ்வது பாவம் அதற்கு பரிகாரம் அதைப் பொதைத்து விடுவ தாகும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அனஸ் பின் மாலிக் கூறினார்கள். புகாரி 415, முஸ்லிம் 1259.
5. பள்ளிக்குச் செல்லும் முன்னர் தொழுகையாளிகளுக்கு தொலை ஏற்படும் பூண்டு, வெங்காயம் போன்ற வாசம் உள்ள பொருள்களை உண்ணாமல் இருப்பது.
1282 – وَحَدَّثَنِى مُحَمَّدُ بْنُ حَاتِمٍ حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ عَنِ ابْنِ جُرَيْجٍ قَالَ أَخْبَرَنِى عَطَاءٌ عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ عَنِ النَّبِىِّ -صلى الله عليه وسلم- قَالَ « مَنْ أَكَلَ مِنْ هَذِهِ الْبَقْلَةِ الثُّومِ – وَقَالَ مَرَّةً مَنْ أَكَلَ الْبَصَلَ وَالثُّومَ وَالْكُرَّاثَ – فَلاَ يَقْرَبَنَّ مَسْجِدَنَا فَإِنَّ الْمَلاَئِكَةَ تَتَأَذَّى مِمَّا يَتَأَذَّى مِنْهُ بَنُو آدَمَ.مسلم
இந்த பூண்டுக் கீரையை யாரேனும் தின்றால் என்றும் – மற்றோரு தடவை இந்த வெங்காயம், பூண்டு, வெங்காயக் கீரை போன்றவற்றை யாரேனும் தின்றால் அவர் நமது பள்ளியை நெருங்க வேண்டாம், ஏனெனில் ஆதமுடய மக்கள் எதிலிருந்து நோவினை அடைவார்களோ அதனால் மலக்குகளும் நோவினை அடைகிறார்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் பின் ஜாபிர் கூறினார்கள். முஸ்லிம் 1282.
6. பள்ளிக்குள் செல்பவர் பள்ளியின் காணிக்கையான இரண்டு ரகஅத்துகளை தொழுது விட்டு அமர்வது சுன்னத்தாகும்
444- حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ يُوسُفَ قَالَ : أَخْبَرَنَا مَالِكٌ ، عَنْ عَامِرِ بْنِ عَبْدِ اللهِ بْنِ الزُّبَيْرِ ، عَنْ عَمْرِو بْنِ سُلَيْمٍ الزُّرَقِيِّ ، عَنْ أَبِي قَتَادَةَ السَّلَمِيِّ أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم قَالَ : إِذَا دَخَلَ أَحَدُكُمُ الْمَسْجِدَ فَلْيَرْكَعْ رَكْعَتَيْنِ قَبْلَ أَنْ يَجْلِسَ.بخاري
உங்களில் ஒருவர் பள்ளியினுள் நுழைந்தால் அமர்வதற்கு முன்னர் இரண்டு ரகஅத் துகள் தொழுது கொள்ளட்டும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபூ கதாதா அஸ்ஸலமிய்யி கூறினார்கள். புகாரி 415.
இரண்டு ரக்அத்கள் தொழுவது
ஒருவர் பள்ளியினுள் நுழைந்து விட்டார் என்று சொன்னால், அவர் நுழைந்ததற்காக மஸ்ஜித் காணிக்கைத் தொழுகையாக நபில் இரண்டு ரக்அத் தொழ வேண்டும்.
இன்னும், ஜும்ஆ நாளின் பொழுது, ஜும்ஆ உரை நிகழ்த்துவதற்காக வேண்டி இமாம் மிம்பரில் ஏறி விட்ட பின் பள்ளியினுள் நுழைகின்றவர், இரண்டு ரக்அத் தொழுது விட்டுத் தான் பள்ளியில் அமர வேண்டும். (முஸ்லிம்).
கிடைத்த இடத்தில் அமருவது
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள், நீங்கள் அமர வேண்டும் என்பதற்காக உங்களது சகோதரர் அமர்ந்த இடத்தை விட்டும் எழுந்திருக்கச் சொல்லாதீர்கள், மாறாக, சற்று நகர்ந்து இடம் கொடுக்கச் சொல்லுங்கள். (முஸ்லிம்)
உட்கார்ந்திருப்பவர்களைத் தாண்டிச் செல்வது அல்லது இரண்டு மனிதர்களுக்கிடையே செல்வது
ஜும்ஆ நாளின் பொழுது ஒருநாள் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் உரை நிகழ்த்திக் கொண்டிருந்த பொழுது பள்ளியினுள் நுழைந்த ஒரு மனிதர், உட்கார்ந்திருப்பவர்களைத் தாண்டிக் கொண்டு (முன்னேறி) வந்தார். அவரைப் பார்த்து இறைத்தூதர் (ஸல்) அவர்கள், உட்காருங்கள், நீங்கள் மற்றவர்களுக்குத் தொந்தரவு தருகின்றீர்கள் என்று கூறினார்கள். (முஸ்லிம், அபூதாவூது)
இமாமினுடைய நிலை வேறானது. அவர் பிற மக்களைத் தாண்டிச் சென்றால் தான் அவர் உரை நிகழ்த்தக் கூடிய மிம்பரை அடைய முடியும் என்றிருப்பதால், இமாம் மற்ற மக்களைத் தாண்டிச் செல்வதில் தவறில்லை.
மேலும், முன்னே இடம் இருக்கும் நிலையில், தாண்டிச் சென்றாலொழிய அந்த இடத்திற்குப் போக முடியாது என்றிருக்கும் பொழுதும், இன்னும் முன் வரிசையில் உட்காருவதை விட்டு விட்டு பின் வரிசையில் மக்கள் அமர்ந்திருக்கும் பொழுது, முன் வரிசையை அடையும் பொருட்டு ஒருவர் மற்ற மக்களைத் தாண்டிச் செல்ல முடியும்.
அல் ஹுஸைன் என்பவர் கூறுகின்றார், ‘பள்ளியின் வாசலில் உட்கார்ந்திருப்பவர்களைத் தாண்டிச் செல்ல வேண்டும் என்ற நிர்ப்பந்தம் வரும் பொழுது, அவர்களைப் பொருட்படுத்த வேண்டியதில்லை. அதைப் போல, ஒரு மனிதர் ஒரு இடத்தில் உட்கார்ந்திருந்து விட்டு, (ஏதோ காரணத்திற்காக) வெளியே செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டு, பின் திரும்பி வருவாராகில், மீண்டும் அவர் அந்த இடத்தில் அதே உள்ள இடத்தில் வந்து அமரலாம். (அல் முக்னீ, பாகம் 2, பக்கம் 39).
குத்பாவை செவி மடுத்துக் கேட்பது
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள், இமாம் குத்பா உரை நிகழ்த்திக் கொண்டிருக்கும் பொழுது, உங்களது நண்பரிடம் ‘செவிமடுப்பீராக’ என்று கூறினீர்கள் என்றால், நீங்கள் அதிகமாகப் பேசி விட்டீர்கள். (அபூதாவூது).
பேசுவதற்குப் பதிலாகச் சைகை செய்வது கூடும்
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் குத்பா உரை நிகழ்த்திக் கொண்டிருக்கும் பொழுது பள்ளியினுள் நுழைந்தவர், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களே, இறுதி நாள் எப்பொழுது (வரும்)? என்று கேட்டார்கள். அப்பொழுது அங்கிருந்த மக்கள் அவரைப் பேசாமல் இருக்குமாறு சைகையில் கூறினார்கள். (ஆனால்) அந்த மனிதர் மீண்டும் மீண்டும் அதே கேள்வியை மூன்று முறை கேட்டார், அப்பொழுது அங்கிருந்த மக்கள் சைகையால், அமைதியாக இருக்கும்படிக் கூறினார்கள். (இப்னு குஸைமா)
இமாமிற்கு மிக அருகில் அமருவது
இமாமிற்கு மிக அருகில் அமர வேண்டும் என்பதை எந்தளவு அதிகமாக ஊக்கவிக்கப்பட்டுள்ளது என்பதை அறியாத மக்களாக, முஸ்லிம்கள் இருந்து கொண்டிருக்கின்றார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள், அல்லாஹ்வைத் துதிப்பதற்காக வாருங்கள், மேலும் இமாமுக்கு மிக அருகாமையில் நெருக்கமாக அமருங்கள். இமாமுக்கு மிக தூரமாக இருக்கக் கூடியவன், அவன் சொர்க்கத்தை விட்டும் தூரமாக, இன்னும் தூரமாகக் கூடியவனாக இருப்பதோடு, எதுவரையெனில் அவன் அதில் நுழைய முடியாத அளவுக்குத் தூரமானவனாகி விடக் கூடியவனாகி விடுவான். (அபூதாவூத்)
பேசுவதைத் தவிர்க்க வேண்டும்
குத்பா பிரசங்கம் நடந்து கொண்டிருக்கும் பொழுது அருகில் இருப்பவரிடம் பேசுவதும் கூடாது. அருகில் இருப்பவரைப் பேசாதீர்கள் என்றும் கூறுவதும் கூடாது.