Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

30 September 2014

புலமைப் பரிசில் பரீட்சையில் தங்காலை முஸ்லிம் வித்தியாலய மாணவி மாவட்ட ரீதியில் இரண்டாம் இடம் ( தமிழ் மொழிப் பிரிவில் )

Congratulation & wish you all the best from ( Tangalle Muslim Welfare Society )

Grade 5 scholarship results has been released and Alhamdulillah. Tangalle Muslin Vidyaleya Student Miss S.L.S.Fathima Sujaida has got the highest marks of 165 and became 2nd in Tamil medium Distict rank in Hambantota District & First highest marks in Tangalle Muslin Vidyaleya

Alhamdulillah Realy so happy to Know that our muslim sisters and brothers achieving in educational fields. And We wish every student who passed this exam very well. All the very best for bright future.


இலங்கையில்  2014 ஆம் ஆண்டு தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் தங்காலை முஸ்லிம் வித்தியாலயத்திலிருந்து பரீட்சைக்கு தோற்றிய மாணவி S.L.S.பாத்திமா சுஜய்தா 165 புள்ளிகளைப் பெற்று தமிழ் மொழிப் பிரிவில் மாவட்ட ரீதியில் இரண்டாம் இடத்தையும், தங்காலை முஸ்லிம் வித்தியாலயத்தில் முதலாம் இடத்தையும் பெற்றுள்ளார். இவர் எம்.ல்.பாத்திமா மிப்ராவினதும், எஸ். எல். எம். சஹாப்தன் இனதும் முதல் புதல்வியாவார்.

S.L.S.பாத்திமா சுஜய்தா என்ற மாணவி தங்காலை அல்-ஹிக்மா பாலர் பாடசாலையிள் 2009 ஆம் ஆண்டு அவர்களின் ஆரம்ப கல்வியை கற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆகஸ்ட் மாதம் 17ம் திகதி இடம்பெற்ற ஐந்தாம் தரப் புலமைப் பரிசில் பரீட்சைக்கு மூன்று இலட்சத்து 27,648 மாணவர்கள் தோற்றினர்.

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் இரண்டாம் இடத்தைப் பெற்று ஹம்பாந்தோட்டை மாவட்டத்திற்கும், தங்காலை பிரதேசத்திற்கும் பெருமையை தேடித்தந்த இவரை தங்காலை முஸ்லிம் நலன்புரி சங்கத்தின் ( TMWS ) தலைவர் அவரின் விட்டுக்குச் சென்று பாராட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சித்திடையந்த மாணவர்களுக்கும் அவர்களது பெற்றோர்களுக்கும் எமது பாராட்டுகள் உரித்தாகுக. இம்முறை போதிய பெறுபேறுகளைப் பெற முடியாதிருந்தபோதும் ஆர்வத்துடன் கற்கைச் செயற்பாடுகளில் ஈடுபட்ட ஏனைய மாணவர்களுக்கும் தங்காலை முஸ்லிம் நலன்புரி சங்கத்தின் ( TMWS ) சார்பாக எமது பாராட்டுக்கள்


ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை ஒரு சிலமாவட்டங்களுக்கான குறைந்தபட்ச புள்ளிகள்

மாத்தளை      159, 

காலி      159,

மாத்தறை      159,

ஹம்பாந்தோட்டை      155,

மன்னார்     157,

வவுனியா      158,

அம்பாறை      158, 

29 September 2014

கணவரைத் தேர்ந்தெடுப்பதில் நன்கு ஆழமாகச் சிந்தியுங்கள்!


இஸ்லாம் பெண்ணைக் கண்ணியப் படுத்தியதிலும் சங்கை செய்திருப்பதிலும் முதன்மையாக விளங்குகிறது.

‘ஒரு பெண் தன் கணவரைத் தேர்ந்தெடுக்க முழு உரிமை பெற்றவள்’ என்று கூறியிருப்பதே! தம் மகளை நிர்ப்பந்தம் செய்து அவள் விரும்பாத ஒருவருக்கு அவளை மணமுடித்து வைக்க எந்தப் பெற்றோருக்கும் இஸ்லாம் அனுமதி வழங்கவில்லை.

இந்த உரிமையை ஒவ்வொரு நேர்வழி பெற்ற முஸ்லிம் பெண்ணும் நன்கு அறிந்து வைத்திருக்க வேண்டும். அதே நேரம் தம் பெற்றோரிடம் ஆலோசனை செய்து தமது வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுப்பதற்கும் ஒரு முஸ்லிம் பெண் கூச்சப்பட மாட்டாள் நாணம் கொள்ள மாட்டாள்.

தம்மை மணமுடித்துக் கொள்ள எவராவது விரும்பினால் அது சம்பந்தமாக முதலில் தன் பெற்றோரிடம் கலந்தாலோசனை செய்துவிட்டே முடிவெடுப்பாள்.

வாழ்க்கையின் தரத்தையும் மக்களின் தரத்தையும் தன்னைவிட தன் பெற்றோர்களே தெளிவாக அறிந்து வைத்திருப்பார்கள் என்பதை விளங்கி இருப்பாள். அதே சமயம் தனது தகப்பனின் பிடிவாதத்திற்கோ உலக ஆசைகளுக்கோ தன் உரிமை பறிக்கப்படுவதையும் ஏற்க மாட்டாள்.

சில சமயங்களில் அவளுக்குப் பிடிக்காத ஒருவனை மணமுடித்து வைக்க தகப்பன் நிர்ப்பந்திக்கக் கூடும். அந்த நிலையிலும் பெண்ணாகிய அவளிடம்தான் முடிவெடுக்கிற உரிமை உண்டு என்பதற்கு பலமான மார்க்க ஆதாரம் இருக்கிறது. இமாம் புகாரி (ரஹ்) அவர்கள் கன்ஸா பின்த் கிதாம் (ரழி) அவர்கள் மூலமாக அறிவிக்கும் ஓர் அறிவிப்பே அந்த ஆதாரம்.

கன்ஸா பின்த் கிதாம் (ரழி) அவர்கள் கூறுகிறார்கள்:

‘‘என்னை எனது தந்தை தன் சகோதரன் மகனுக்குத் திருமணம் முடித்து வைத்தார். ஆனால் நான் அந்தத் திருமணத்தை விரும்பவில்லை. எனக்கு அது வெறுப்பாகவே இருந்தது. இதைப்பற்றி நான் நபி (ஸல்) அவர்களிடம் முறையிட்டேன். அதற்கு அவர்கள் ‘‘உனது தந்தை செய்ததை நீ ஏற்றுக்கொள் பொருந்திக் கொள்!” என்றார்கள். நானோ ‘எனது தந்தையின் செயல் எனக்குப் பிடிக்கவில்லை’ என்பதாக மறுத்து விட்டேன்.


நபி (ஸல்) அவர்கள்


‘‘அப்படியானால் நீ செல்லலாம் இந்தத் திருமணம் ஆகுமான; திருமணம் அல்ல இது செல்லாது நீ விரும்பியவரை மணம் முடித்துக் கொள்ள உனக்கு உரிமை இருக்கிறது!” என்று கூறி என் திருமணத்தை ரத்து செய்தார்கள். எனினும் நான்‘‘அல்லாஹ்வின் தூதரே! எனது தந்தை செய்ததை ஏற்றுக் கொண்டேன். இருப்பினும் பெண்கள் விஷயத்தில் அவர்களின் பெற்றோர்களுக்கு (நிர்ப்பந்திக்க) எந்த அதிகாரமும் இல்லை என்பதை வெளிப்படுத்தவே இப்படி விசாரித்தேன். பெண்கள் இதைப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே இவ்வாறு செய்தேன்” என்று தெரிவித்தேன். (ஸஹீஹுல் புகாரி)


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இந்த நிகழ்ச்சியில் அந்தப் பெண்ணுக்கு முதலில் என்ன உபதேசம் செய்தார்கள் என்பதைக் கவனிக்க வேண்டும்.

‘‘தந்தையின் செயலை ஏற்றுக்கொள்! பொருந்திக் கொள்!” என்று உபதேசித்தார்கள். ஆம்! இதுதான் உண்மை. பொதுவாக பெற்றோர்கள் தங்களது பிள்ளைகள் நல்லபடி வாழ வேண்டும் என்றும் வெற்றிகரமான வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும் என்றே விரும்புவார்கள். ஆனாலும் நபி (ஸல்) அவர்கள் அந்தப் பெண்ணுக்கு அவர் விரும்பாத ஒருவரை அவரது பெற்றோர் மணமுடித்து வைத்துள்ளார்கள் என்பதை உணர்ந்தவுடன் ‘தன் கணவனைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் அதிகாரத்தை’ அவருக்கு முழுமையாக வழங்கி விட்டார்கள். அதுமட்டுமின்றி அநியாயக்காரத் தந்தை தன் பெண்ணுக்கு இழைக்கிற அநீதத்தை விட்டும் பாதுகாப்பு வழங்கினார்கள்.

இஸ்லாம் பெண்ணுக்குச் சிரமத்தை அளிக்கவோ தான் விரும்பாத ஒருவரோடு அவள் வாழ்வதையோ விரும்பவில்லை. காரணம் திருமணம் என்பது வெற்றிகரமானதாகவும் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே ஓர் உறுதியான பொருத்தம் கொண்டதாகவும் இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறது. மேலும் தம்பதியர் இருவரும் அவர்களின் ஆசையிலும் இயற்கைப் பண்பாடுகளிலும் தோழமையிலும நோக்கங்களிலும் ஒருவர் மற்றவருக்கு நிகரானவராக மனமொப்பி வாழவேண்டும் எனவும் விரும்புகிறது.

இப்படிப்பட்ட இல்லறக் கோட்டையை நிர்மாணிப்பதில் இடையூறு ஏற்பட்டு விட்டால்… கணவன் மனைவி இருவரின் வாழ்க்கையும் சுவையாக இல்லை என்றால்… தன் கணவனிடம் இருந்து அன்பையும் மனத்தூய்மையையும வாக்குறுதியை நிறைவேற்றுகிற நேர்மையையும் ஒரு பெண் பார்க்க முடியவில்லை என்றால்… கணவனால் இறைமறுப்புக்கு ஆளாகிவிடுவோம் என்று பயந்தால்… கணவனைக் கொண்டு இறைக் கட்டளைகளை அமல் செய்ய முடியாது என்ற நிலைக்கு வந்துவிட்டால் அப்போது அந்தப் பெண தனது கணவனிடமிருந்து விவாகரத்து கோருவதற்கும் இஸ்லாம் அனுமதிக்கிறது. இதை நபி (ஸல்) அவர்கள் உறுதிப்படுத்தி இருக்கிறார்கள்.

ஸாபித் பின் கைஸ் (ரழி) என்ற நபித்தோழன் மனைவி, நபியவர்களிடம் வந்தார். அவரது பெயர் ‘ஜமீலா’ என்பதாகும். (இவர் அப்துல்லாஹ் இப்னு உபை உடைய சகோதராவார்.) ‘‘அல்லாஹ்வின் தூதரே! என் கணவர் ஸாபித் பின் கைஸின் குணத்தையோ மார்க்கப் பற்றையோ நான் குறை கூறவில்லை. ஆனால நான் இஸ்லாமில் இருந்து கொண்டே நிராகரிப்புக்குரிய செயலைச் செய்து விடுவேனோ என்று பயப்படுகிறேன்” என்றார்.

அதாவது நல்லவரான தன் கணவருடன் வெளியுலகத்தில் மனைவியாக வாழ்ந்து கொண்டு மனதளவில் அவரை வெறுத்துக் கொண்டு இரட்டை வேடம் போடுவதை தாம் விரும்பவில்லை என்பதைச் சூசகமாகச் சொன்னார். அல்லது நல்லவரான தம் கணவரை வெறுத்த நிலையிலேயே தொடர்ந்து வாழ்ந்து வந்தால எங்கே தாம் நிராகரிப்பாளர்களின் செயல்களில் சிக்கிவிடுவோமோ என்று அஞ்சுவதாகத் தெரிவித்தார்.


அப்போது நபி (ஸல்) அவர்கள்


‘‘ஸாபித் உனக்கு மஹராக – மணக்கொடையாக அளித்த தோட்டத்தை நீ அவருக்கே திருப்பித் தந்துவிடுகிறாயா?” என்று கேட்டார்கள். அதற்கு அவர் ‘‘ஆம் அல்லாஹ்வின் தூதரே! நான் அதைத் திருப்பிக் கொடுத்து விடுகிறேன்” என்றார். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள தமது தூதர் ஒருவரை ஸாபித் பின் கைஸிடம் அனுப்பி ‘‘நீ அவருக்கு (ஜமீலாவுக்கு) கொடுத்த தோட்டத்தை ஏற்றுக் கொண்டு அவரைத் தலாக் சொல்லிவிடு!” என்று கூறி விட்டார்கள்.


ஸஹீஹுல் புகாரியின் மற்றோர் அறிவிப்பில அந்தப் பெண்மணி நபி (ஸல்) அவர்களிடம் முறையிடும் போது


‘‘அல்லாஹ்வின் தூதரே! நான் ஸாபித் பின் கைஸ் பின் ஷம்மாஷ் (ரழி) அவர்களுடைய மார்க்கப் பற்றையோ  குணத்தையோ குறை சொல்லவில்லை. எனினும் அவரைச் சகித்துக் கொண்டு என்னால் வாழ முடியவில்லை” என்று கூறியதாக வந்துள்ளது. (ஸஹீஹூல் புகாரி)


இஸ்லாம் பெண்ணுக்குரிய மனித உரிமையைப் பாதுகாக்கிறது அவளுடைய கண்ணியத்திற்கு உத்தரவாதம் அளிக்கிறது. ஒரு கணவரைத் தேர்ந்தெடுப்பதில் அவளுக்குரிய உரிமையை மதிக்கிறது. அவளுக்குப் பிடிக்காத ஓர் ஆணுக்கு அவளை மணமுடித்து வைக்க தந்தையோ வேறு நெருங்கிய உறவினர்களோ யார் முயன்றாலும் அதைத் தடை செய்கிறது. இதற்கு பரீரா (ரழி) அவர்களது சம்பவம் இன்னுமோர் ஆதாரமாகும்.

பரீரா (ரழி) அவர்கள் ஓர் ஹபஷி (நீக்ரோ) அடிமைப் பெண்ணாக இருந்தார்கள். அவரை அபூலஹபின் மகன் உத்பா சொந்தமாக்கி இருந்தான். தனக்கு அடிமையாக இருந்த காலத்தில் முஃகீஸ் என்ற ஓர் அடிமைக்கு பரீராவைக் கட்டாயப்படுத்தி மணமுடித்து வைத்துவிட்டான்.

பரீரா (ரழி) அவர்களுக்கோ அந்தத் திருமணத்தில் சிறிதும் விருப்பம் இல்லை. தம் கணவரைத் தேர்ந்தெடுக்கும் அதிகாரம் அவருக்கு இருந்திருந்தால நிச்சயமாக முஃகீஸை ஏற்றுக் கொண்டிருக்க மாட்டார். இந்த நிலையில் ஆயிஷா (ரழி) அவர்கள் பரீராவின் மீது கருணை காட்டி அவரை விலைக்கு வாங்கி உரிமையிட்டு விட்டார்கள் விடுதலை செய்து விட்டார்கள்.


தான் சுதந்தரமாகி விட்டதை உணர்ந்த பரீரா இனி தமது மண வாழ்க்கையின் நிலைமையையும் முடிவையும் தீர்மானிப்பதில தமக்கு மார்க்கம் வழங்கியிருக்கும் முழு உரிமையையும் நன்கு விளங்கிக் கொண்டார். உடனே தம் கணவடமிருந்து விவாகரத்துப் பெறுவதை நாடினார். இதையறிந்த முஃகீஸ்


‘‘பரீராவே! என்னை ஏற்றுக்கொள் ஏற்றுக்கொள்!” என்றவாறு அவர் பின்னாலேயே சுற்றிக் கொண்டிருந்தார்.


இமாம் புகாரி (ரஹ்) அவர்கள இந்தச் செய்தியை இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் மூலம் அறிவிக்கிறார்கள். அதில் இப்னு அப்பாஸ் (ரழி) கூறுகிறார்கள்:


‘‘பரீராவின் கணவர் அடிமையாக இருந்தார். அவருக்கு முஃகீஸ் என்று (பெயர்) சொல்லப்படும். அவர் (பரீரா தம்மை பிரிந்து விட நினைக்கிறார் என்பதை அறிந்த போது) தமது தாடியில் கண்ணீர் வழியும் அளவிற்கு அழுத வண்ணம் பரீராவிற்குப் பின்னால் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்ததை இப்போதும் நான் பார்ப்பதைப் போன்றுள்ளது. அப்போது நபி (ஸல்) அவர்கள் (எனது தந்தையான) அப்பாஸ் (ரழி) அவர்களிடம ‘‘அப்பாஸ் அவர்களே! முஃகீஸ் பரீராவின் மீது வைத்துள்ள நேசத்தையும பரீரா முஃகீஸின் மீது கொண்டுள்ள வெறுப்பையும் கண்டு நீங்கள் வியப்படையவில்லையா?” என்று கேட்டார்கள்.


மேலும முஃகீஸ் (ரழி) அவர்களின் நிலைமையைப் பார்த்து


‘‘முஃகீஸை நீ மீண்டும் ஏற்றுக்கொள்ளலாமல்லவா?” என்று பரீராவிடமும் சொன்னார்கள். அதற்கு பரீரா ‘‘அல்லாஹ்வின் தூதரே! எனக்குத் தாங்கள் கட்டளை இடுகின்றீர்களா?” எனக் கேட்டார். நபி (ஸல்) அவர்கள் ‘‘இல்லை இல்லை! நான் சிபாரிசு செய்(யவே விரும்பு)கின்றேன்” என்றார்கள். அப்போது பரீரா ‘‘(அப்படியானால) அவர் எனக்குத் தேவையில்லை!” என்று கூறிவிட்டார். (ஸஹீஹுல் புகாரி)


இந்த நபிவழிச் செய்தியின் வாயிலாக ஒரு சுதந்தரமான பெண் தனக்குப் பிடிக்காத கணவரை விட்டுப் பிரிந்து விடுவதில மார்க்கம் எந்த அளவிற்கு அனுமதித்துள்ளது என்பதை அறிகிறோம்.

இன்னும் உள்ளத்தை உருக்கக்கூடிய இக்கட்டான நிலையில் நபியவர்கள் சிக்கியிருந்ததையும் உணர முடிகிறது. ஒரு பக்கம தம் மனைவியை ஆழமாக நேசிக்கும் கணவர் மறுபக்கம் கொஞ்சமும் சமரசத்திற்கு இணங்கி வராதபடி தன் கணவரை வெறுக்கும் மனைவி!

இங்கு நபி (ஸல்) அவர்களால் முயன்ற ஒரே விஷயம்

‘‘பரீராவே! முஃகீஸை மீட்டுக்கொள்ள முடியாதா? அவர் உனக்குக் கணவராக உன் குழந்தைக்குத் தந்தையாக இருந்தால்லையா?” என்று சிபாரிசு செய்தது மட்டுமே!

இந்த இடத்தில் இறையச்சமுள்ள பெண்ணான பரீராவைப் பற்றியும் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். நபி (ஸல்) அவர்கள் கூறுவதைக் கேட்டவுடன்

‘‘அல்லாஹ்வின் தூதரே! இது உங்களது கட்டளையா? அல்லது சிபாரிசா? – கட்டளை என்றால் இதோ… உடனே கட்டுப்படுகிறேன்” என்று தனது கீழ்ப்படிதலை வெளிப்படுத்துகிறார். ஆயினும் நபியவர்கள் தங்களது கருத்தை தெரிவித்தவுடன் பரீரா தன் இறுதி முடிவைச் சொல்லி விடுகிறார்.

தங்களது பெண் பிள்ளைகள் மீது வரம்புமீறி நிர்ப்பந்தம் செய்து அவர்கள் விரும்பாத ஆணுக்கு அநியாயமாக மணமுடித்து வைக்கிற பெற்றோர்கள நபி (ஸல்) அவர்களின் அழகிய நடைமுறையை விளங்கிக் கொள்ள வேண்டும்.

மார்க்கத்தைப் பேணி நடக்க விரும்புகிற நல்ல முஸ்லிமான பெண்களுக்கு ஒரு நிலையான நிரந்தரமான அழகிய அளவுகோல்கள் இருக்கின்றன. அந்த அளவுகோல்களைக் கொண்டே ஒரு முஸ்லிமான பெண் தனது வருங்காலக் கணவரைத் தேர்ந்தெடுக்கின்றாள்.

நம்பிக்கை (ஈமான்) கொண்ட பெண வெறுமனே வெளிரங்க அழகைக் கொண்டோ கவர்ச்சியைக் கொண்டோ உயர்ந்த பதவிகளைப் பார்த்தோ செல்வச் செழிப்பை வைத்தோ மட்டும் அந்தப் பெண் தனது கணவரைத் தேர்ந்தெடுப்பது கிடையாது. மாறாக தான் தேர்ந்தெடுக்கப்படுகிற கணவரிடம் உறுதியான மார்க்கப் பற்றும் நல்ல குணங்களும் இருக்கின்றதா என்று தெளிவாகத் தெரிந்த பின்பே தேர்ந்தெடுப்பாள். இவை இரண்டுதான் வெற்றிகரமான இல்லறத்தின் தூண்களாகவும் கணவரை அலங்கரிக்கக் கூடிய ஆபரணங்களாகவும் இருக்கின்றன. அதனால்தான் நபி (ஸல்) அவர்கள ஆண் பெண் இருவரும் தங்களது துணையைத் தேர்ந்தெடுக்கும் போது உன்னிப்பாக கவனிக்க வேண்டிய இரண்டு தகுதிகளாக மார்க்கப்பற்றையும் நல்ல குணத்தையும் குறிப்பிட்டார்கள்.

‘‘எவருடைய மார்க்கப்பற்றைக் குறித்தும் ஒழுக்கப் பண்பாட்டைக் குறித்தும் உங்களுக்குத் திருப்தியாக உள்ளதோ அவர் திருமணச் சம்பந்தம் வைத்துக் கொள்வதற்குத் தூது அனுப்பினால் அவருக்குத் திருமணம் செய்து கொடுங்கள். நீங்கள் அப்படிச் செய்யவில்லையானால் சமுதாயத்தில் குழப்பமும் சீர்குலைவுமே ஏற்படும்” என்று எச்சரித்தார்கள். (ஜாமிவுத் திர்மிதி, ஸுனன் இப்னு மாஜா)

எப்படி ஒரு முஸ்லிமான ஆண

‘(வெளி அழகால்) தன்னைக் கவர்கிறாளே’ என்ற ஒரே காரணத்திற்காக குணத்தால் கெட்ட ஒருத்தியை மணக்க மாட்டாரோ அதுபோலவே ஒரு முஸ்லிமான பெண்ணும் வெளி அழகு மட்டுமே கொண்ட மார்க்கப் பற்றில்லாத வாலிபரையும் மணக்க மாட்டாள்.

நல்ல ஒழுக்கமுள்ள பண்புள்ள கற்பைப் பேணும் நடத்தையுள்ள அழகிய மார்க்கமுள்ள ஒரு வாலிபரே ஓர் உண்மையான முஸ்லிம் பெண்மணியைக் கவர முடியும்.

நம்பிக்கையுள்ள தூய்மையான வாலிபப் பெண்ணுக்கு ஒரு நம்பிக்கையுள்ள தூய்மையான வாலிபரே தகுதியுள்ள கணவராக இருக்க முடியும். இவ்வாறே ஓர் ஒழுக்கமற்ற வழிகெட்ட வாலிபப் பெண்ணுக்கு அவளைப் போலவே ஒழுக்கமற்ற வழிகெட்ட வாலிபனே தகுதியாக முடியும். இதை அல்லாஹ் இப்படிக் கூறுகிறான்:

கெட்ட பெண்கள் கெட்ட ஆண்களுக்கும் கெட்ட ஆண்கள் கெட்ட பெண்களுக்கும் இன்னும்: நல்ல தூய்மையுடைய பெண்கள், நல்ல தூய்மையான ஆண்களுக்கும் நல்ல தூய்மையான ஆண்கள் நல்ல தூய்மையான பெண்களுக்கும் (தகுதியானவர்கள்.) அவர்கள் கூறுவதை விட்டும் இவர்களே தூய்மையானவர்கள். இவர்களுக்கு மன்னிப்பும், கண்ணியமான உணவுமுண்டு.  (அன்னூர் 24:26)

இங்கு ஒன்றை மறந்து விடக்கூடாது. அதாவது தான் தேர்ந்தெடுக்கிற ஆண் சிறிதும் அழகற்றவராக கோரமாக இருந்தாலும் மார்க்கப்பற்றுக்காக அவரைத்தான் மணந்தாக வேண்டும் என்ற நிர்ப்பந்தமும் ஒரு முஸ்லிமான பெண்ணுக்கு இல்லை. அவள் எதிர்பார்க்கும் அழகையும் மனதை நிரப்பும் செழிப்பையும் பெற்ற ஆணை மணக்க அவளுக்கு முழு உரிமையும் உண்டு. அதே சமயம் வெளித்தோற்றத்திற்கு அதிகப்படியான முக்கியத்துவத்தைக் காட்டி உள்ளரங்கமான நற்குணங்களை அலட்சியப்படுத்தி விடவும் கூடாது.

ஒரு முஸ்லிம் பெண்மணி தனது தனித்தன்மைக்கும் மனதிற்கும் உகந்த ஆணை மணமுடிப்பதுடன தனது கணவர் தன் மீது முழு அதிகாரம் பெற்ற நிர்வாகி என்பதையும் புரிந்து வைத்திருப்பாள்.

அல்லாஹ் கூறுகிறான்:

அல்லாஹ் சிலரை சிலரைவிட மேன்மைப்படுத்தி வைத்திருக்கிறான். (ஆண்கள்) தங்கள் சொத்துகளிலிருந்து (பெண் பாலாருக்காகச்) செலவு செய்து வருவதினாலும், ஆண்கள் பெண்களை நிர்வகிக்க வேண்டியவர்களாக இருக்கின்றனர். எனவே நல்லொழுக்கமுடைய பெண்கள் (தங்கள் கணவன்மார்களிடம்) விசுவாசமாகவும், பணிந்தும் நடப்பார்கள். (அன்னிஸா 4:34)

எனவே ஒரு முஸ்லிம் பெண்மணி எப்படிப்பட்ட ஆணைத் தனக்குக் கணவராகத் தேர்ந்தெடுக்க விரும்புவாள் என்றால் அவள் தேர்ந்தெடுத்த கணவர் அவளை நிர்வகிப்பதால் அவள் கண்ணியத்தையும் மரியாதையையும் அடைய வேண்டும் அந்தக் கணவருடன் வாழ்வதைக் கொண்டு அவள் மகிழ்ச்சியுற வேண்டும்.

‘இவனைப் போய் மணமுடித்துக் கொண்டோமே!’ என்று நாளை புலம்புகிற நிலைக்கு அவள் ஆகிவிடக்கூடாது.


கரங்களைக் கோர்த்து நம்பிக்கையுடன் தொடங்குகிற இல்லற வாழ்க்கையில் இஸ்லாம் விரும்புவதெல்லாம் அது காட்டிய நெறியின்படி வாழ வேண்டும் என்பதுதான்.

கணவன் மனைவி இருவரும் மனித குலத்துக்கு இஸ்லாம் விடுக்கிற செய்தியை எடுத்துரைக்க வேண்டும் முழுமையான முஸ்லிம் குடும்பத்தை உருவாக்க வேண்டும் தூய்மையான சந்ததியை உருவாக்குவதிலும அதற்கு நல்ல அறிவைப் புகட்டுவதிலும சிறந்த சிந்தனைகளைத் தங்கள் பிள்ளைகளிடம் விதைப்பதிலும் இணைந்து செயல்பட வேண்டும்.

இந்த முயற்சியில் ஒருவருக்கொருவர் அன்புடனும் நெருக்கத்துடனும் இணங்கி செயல்பட வேண்டும். இருவரின் போக்கிலும் முரண்பாடுகளோ குண மாறுதல்களோ ஏற்பட்டுவிடக் கூடாது. இயற்கையிலும் பண்பாட்டிலும் வித்தியாசங்கள் உண்டாகி விடக்கூடாது. மார்க்கப்பற்றில் கோளாறு வந்து விடக்கூடாது.

ஓர் இறை நம்பிக்கையுள்ள ஆணும் பெண்ணும் ஒரு மகா சமுத்திரத்தில அருகருகே இணைந்து சென்று கொண்டிருக்கிற இரண்டு ஓடங்களைப் போன்றவர்கள் ஆவர். எனவே இருவரும் வெவ்வேறு திசைகளில் பயணிக்காமல் ஒன்றிணைந்து செயல்பட்டால்தான் இஸ்லாம் விரும்புகிற இல்லறத்தை நடத்திக் காட்ட முடியும்.

இஸ்லாம் என்பது உலக மக்களுக்கு அல்லாஹ் எடுத்துச் சொல்ல விரும்பும் நேர்வழியின் தூதுத்துவ செய்தியாகும். அதை ஒவ்வோர் ஆண் பெண் மீதும் அமானிதமாகச்” (“அமானிதம் – அடைக்கலம்) சுமத்தியிருக்கிறான். இதையே தனது சங்கைமிகு நூலில் கூறும்போது….

நிச்சயமாக முஸ்லிமாகிய ஆண்களும் பெண்களும் நம்பிக்கையாளரான ஆண்களும் பெண்களும் (இறைவனுக்கு) வழிப்படும் ஆண்களும் பெண்களும உண்மையே கூறும் ஆண்களும் பெண்களும பொறுமையுள்ள ஆண்களும் பெண்களும (அல்லாஹ்வுக்குப்) பயந்து நடக்கும் ஆண்களும் பெண்களும தானம் செய்யும் ஆண்களும் பெண்களும நோன்பு நோற்கும் ஆண்களும் பெண்களும கற்புள்ள ஆண்களும் பெண்களும அல்லாஹ்வுடைய பெயரை அதிகமாக நினைவுகூரும் ஆண்களும் பெண்களும் ஆகிய இவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும் மகத்தான கூலியையும் தயார்ப்படுத்தி வைத்திருக்கின்றான். (அல்அஹ்ஸாப் 33:35)


ஆகவேää வாழ்க்கைப் பயணத்தை நல்ல முறையில் தொடங்குவதற்கும சரியான இலக்கை நோக்கி நகர்த்துவதற்கும் திருமண உறவு பலமிக்கதாக இருக்க வேண்டும். குடும்பத்தின் தூண்களை உறுதிப்படுத்த வேண்டும். பாதுகாப்பான அஸ்திவாரத்தின் மீது அந்தக் குடும்பம் நிலைபெற வேண்டும். பாதுகாப்பான அஸ்திவாரம் என்பது ஒன்றை அழகிய முறையில் தேர்ந்தெடுப்பதே!

எத்தனையோ நல்ல முஸ்லிம் பெண்மணிகள் இருக்கிறார்கள். அவர்களின் உயர்ந்த நோக்கங்களும் தனித்தன்மைகளும் மிகச் சிறப்பானவை. கணவரைத் தேர்ந்தெடுப்பதில் அவர்கள் காட்டுகிற ஒரு தொலைநோக்குப் பார்வை உண்மையில் பாராட்டுக்குரியது.


இத்தகையோல் ஒருவராகத்தான் உம்மு ஸுலைம் பின்த் மில்ஹான் (ரழி) அவர்களை அறிகிறோம். அன்ஸாப் பெண்களிலேயே மிக விரைந்து இஸ்லாமைத் தழுவிய பெண்களில் இவரும் ஒருவர்.

உம்மு ஸுலைம் (ரழி) அவர்கள் இஸ்லாமைத் தழுவிய காலத்தில்

‘மாலிக் பின் நழ்ர்’ என்பவருக்கு மனைவியாக இருந்தார்கள். (உம்மு ஸுலைமுக்கு மாலிக் பின் நழ்ரு மூலமாக பிறந்தவரே அனஸ் (ரழி).)


உம்மு ஸுலைம் (ரழி) இஸ்லாமை ஏற்றது மாலிக் பின் நழ்ருக்குப் பிடிக்கவில்லை. எனவே உம்மு ஸுலைமை வெறுத்து விலகிவிட்டார்.


தன் கணவர் தன்னை ஆதரவின்றி விட்டுவிட்டாரே என்பதற்காக உம்மு ஸுலைம் (ரழி) இஸ்லாமைத் துறந்து விடவில்லை விட்டுக் கொடுத்து விடவில்லை. மாறாக இஸ்லாமில் உறுதியாக நிலைத்திருந்தார்.


சில காலங்கள் கழிந்தன. மாலிக் இறந்துவிட்ட செய்தி உம்மு ஸுலைம் (ரழி) அவர்களுக்குக் கிடைத்தது. அப்போது நபியவர்களுக்குப் பணிவிடை புரியுமாறு பத்து வயதே நிரம்பியிருந்த தனது மகன் அனஸை நபியவர்களிடம் ஒப்படைத்து விட்டிருந்தார்கள்.


கணவரை இழந்த உம்மு ஸ{லைம் (ரழி) அவர்களுக்கு இளம் வயதுதான். இந்த நிலையில மதீனாவில் மிகப்பெரும் செல்வந்தராகவும் அழகிய தோற்றமிக்கவராகவும் நன்கு பிரசித்தி பெற்றவராகவும் இருந்த ஒருவர் உம்மு ஸுலைமை மணமுடிக்க முன்வந்தார். அவரது பெயர்தான்


‘அபூதல்ஹா’


அபூதல்ஹா (ரழி) அவர்கள் அப்போது முஸ்லிமாகவில்லை. எனினும மதீனத்துப் பெண்கள் மத்தியில் அதிகமாகப் பேசப்பட்டு பலரின் உள்ளங்களைக் கவர்ந்தவராக இருந்தார். தான் உம்மு ஸுலைமை மணமுடித்துக் கொள்ள விரும்புவதைத் தெரியப்படுத்தினால் அதை அவர் உடனே விரும்பி சந்தோஷப்பட்டு மனமாற ஏற்றுக்கொள்வார் என்று நினைத்திருந்தார். ஆனால் உம்மு ஸுலைமைச் சந்தித்து அவரது பதிலைக் கேட்ட போதோ அபூதல்ஹாவுக்குப் பெரியதோர் அதிர்ச்சியாக இருந்தது.


உம்மு ஸுலைம் (ரழி) அவர்கள் கேட்டார்கள்:


‘‘ஓ… அபூதல்ஹாவே! நீ வணங்கக் கூடிய தெய்வம் என்னவென்று பார்த்தீரா? அது பூமியிலிருந்து முளைக்கக் கூடிய ஓர் அற்ப மரம். அதை ஹபஷி அடிமை ஒருவன் சிலையாகச் செதுக்கினான்”.


இதற்கு அபூதல்ஹா


‘‘ஆம் அப்படித்தான்!” என்று ஆமோதித்தார். உடனே உம்மு ஸுலைம் (ரழி)‘‘அபூதல்ஹாவே! என்ன உமக்கு வெட்கமாக இல்லையா? பூமியிலிருந்து முளைத்த ஒரு மரத்திற்கு ஹபஷி ஒருவன் உருவம் கொடுத்தான். அதைப்போய் வணங்குகிறீரே? அதற்குச் சிரம் பணிகிறீரே?” என்று அறிவுரை கூறினார்.


இதைக் கேட்டு அபூதல்ஹா சற்று சுதாரித்துக் கொண்டு உம்மு ஸுலைம் (ரழி) அவர்களுக்கு ஆசைட்டும் விதமாக


‘‘உம்மு ஸுலைமே! உமக்கு ஓர் உயர்ந்த வாழ்க்கையைத் தருகிறேன் பெரும் மஹரையும் கொடுத்து மணமுடித்துக் கொள்கிறேன்” என்றார். ஆனாலும் உம்மு ஸுலைம் (ரழி) அவர்கள ‘‘இல்லை ஒருக்காலும் நான் உம்மை ஏற்றுக் கொள்ளமாட்டேன்” என்று உறுதியாக மறுத்து விட்டார்.


மேலும் கூறினார்:


‘‘அப10தல்ஹாவே! உம்மைப் போன்ற ஓர் ஆணை யாரும் திரும்ப அனுப்பமாட்டார் ஏற்றுக் கொள்ள மறுக்க மாட்டார் ஆனால நீரோ ஏக இறைவனை நிராகரிக்கக் கூடிய காஃபிராக – நிராகரிப்பாளராக இருக்கிறீர் நானோ ஒரு இஸ்லாமியப் பெண்! உம்மை மணமுடித்துக் கொள்ள எனது மார்க்கத்தில் எனக்கு அனுமதியில்லை. நீர் இஸ்லாமை ஏற்று நம்பிக்கை கொண்டால அதையே எனக்குரிய மஹராக ஏற்று நான் உம்மை மணமுடித்துக் கொள்கிறேன் அதைத் தவிர வேறு எதுவும் எனக்கு வேண்டாம்” என்று தெளிவாகத் தெரிவித்து விட்டார்கள். (ஸுனனுன் அந்நஸாம்)


திரும்பிச் சென்ற அபூதல்ஹா மீண்டும் இரண்டாவது முறையாக உம்மு ஸுலைமிடம் வந்து முன்பு கூறியதைவிட அதிகமான மஹரைத் தருவதாகக் கூறினார்.

இப்போதும் உம்மு ஸுலைம் (ரழி) அவர்கள் கண்டிப்பாக மறுத்து விட்டார்கள். அவர்களின் வைராக்கியம் (மனஉறுதி) அபூதல்ஹாவின் உள்ளத்தில் உம்மு ஸுலைமின் மீது நேசத்தையும் அன்பையுமே அதிகப்படுத்தியது. உம்மு ஸுலைம் (ரழி) அவர்கள் மீண்டும் சொன்னார்கள்:

‘‘அபூதல்ஹாவே! ஓர் அற்ப மரத்திலிருந்து அடிமை ஒருவன் செதுக்கியதையே நீர் தெய்வமாக வணங்குகிறீர் அதற்கு தீ மூட்டினால் எரிந்து சாம்பலாகி விடும். இது உமக்குத் தெரியாதா?”

இந்த ஞானமிக்க பேச்சு அபூதல்ஹாவின் உள்ளத்தில் ஆழமாக இறங்கியது. தன் மனதிற்குள்ளேயே

‘‘என்ன… கடவுளை எரிக்க முடியுமா? எரிந்து சாம்பலானால் அது கடவுளாகத்தான் இருக்க முடியுமா?” என்று கேட்டுக் கொண்டார். பின் அதே இடத்தில் தம் நாவை அடக்க முடியாமல ‘‘நான் சாட்சி சொல்கிறேன் வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை! இன்னும சாட்சி சொல்கிறேன் முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதரும் அடியாரும் ஆவார்கள்” என்று மொழிந்து இஸ்லாமை ஏற்றுக் கொண்டார். உடனே உம்மு ஸுலைம் (ரழி) அவர்களின் உள்ளத்தில் மகிழ்ச்சியும் மலர்ச்சியும் பொங்கின. தம் மகன் அனஸ் (ரழி) அவர்களை நோக்கி ‘‘அனஸே! எழு தயாராகு உனது தாய் உம்மு ஸுலைமை அபூதல்ஹாவுக்கு மணமுடித்து வை!” என்று கூறினார்கள்.

அனஸ் (ரழி) அவர்கள சாட்சிகளை வரவழைத்து தமது தாயை அபூதல்ஹா (ரழி) அவர்களுக்கு மணமுடித்துக் கொடுத்தார்கள். அந்தத் தருணத்தில் அபூதல்ஹா (ரழி) அவர்கள் அடைந்த ஆனந்தத்தை எப்படித்தான் வருணிக்க!

தமது செல்வம் அனைத்தையும் உம்மு ஸுலைம் (ரழி) அவர்களிடமே கொட்டி விட்டார்கள். இருப்பினும உம்மு ஸ{லைம் (ரழி) அவர்கள்

‘‘அபூதல்ஹாவே! நான் உங்களை அல்லாஹ்விற்காகவே மணமுடிக்கிறேன் அதைத் தவிர வேறு எந்த மஹரும் எனக்குத் தேவையில்லை” என்பதாகச் சொல்லிவிட்டார்கள்.

அபூதல்ஹா (ரழி) அவர்களை மணமுடித்ததைக் கொண்டு தமக்குப் பொருத்தமான  நிகரான ஒருவரைத் துணையாக்கிக் கொண்டோம் என்று மட்டும் உம்மு ஸுலைம் (ரழி) அவர்கள் நினைக்கவில்லை. மாறாக இந்த உலகச் செல்வங்கள் அனைத்தையும் மிகைத்த ஒரு செல்வத்தை நன்மையை அல்லாஹ்விடம் அடைந்து கொண்டோம் என்றே விளங்கினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறிய ஒரு செய்தி அவர்களுக்குத் தெரியாமலா இருந்திருக்கும்…?

‘‘உங்கள் மூலமாக அல்லாஹு தஆலா ஒருவருக்கு நேர்வழி காட்டுவது உங்களுக்குச் சிவந்த ஒட்டகைகள் கிடைப்பதை விடச் சிறந்தது” என்றல்லவா நபியவர்கள் கூறியிருக்கிறார்கள்!? (ஸஹீஹுல் புகாரி)

இன்றைய முஸ்லிம் பெண்மணிகள் உம்மு ஸுலைம் (ரழி) அவர்களைப் போன்ற பெண்களின் வரலாற்றைப் படித்து படிப்பினை பெற்றுக் கொள்ள வேண்டும். இவர்களையே முன்மாதிகளாக பின்பற்றி வாழ வேண்டும். இவர்களிடம் இருக்கும் தனித்தன்மைகளையும் ஈமானின் (நம்பிக்கையின்) தூய்மையையும் கொள்கை உறுதியையும் கணவரைத் தேர்ந்தெடுப்பதில் அழகிய முறையைக் கையாள்வதையும் கற்றுக் கொள்ள வேண்டும்.

28 September 2014

இன்றைய ஆடைக் கலாச்சாரமும் இஸ்லாமிய ஆடைக்கலாச்சார அவசியமும்..!!

 இஸ்லாம் பெண் அடிமைத்துவ மார்க்கம் என  மாற்று மதத்தைச் சேர்ந்த பலரும் விமர்சிப்பதுண்டு.உண்மையில் இஸ்லாம் எங்கு?எப்படி? எவ்வாறு? ஒரு பெண்ணை கண்ணியப் படுத்த வேண்டுமோ அங்கு அவ்வாறு அப்படி பெண்ணை கண்ணியப் படுத்துகிறது என்பது தான் உண்மை.

இஸ்லாம் பெண் அடிமைத்துவ மார்க்கம் என நிரூபிக்க விளையும் பலர் இஸ்லாமிய ஆடைக்கலாச்சாரத்தில் ஒரு கண் வைத்துக் கொண்டுதான் இருப்பார்கள்.இஸ்லாமிய ஆடையில் பழக்கப்பட்ட ஒரு பெண்ணை இன்னுமொரு ஆடைக் கலாச்சாரத்தை பின்பற்ற அழுத்தம் பிரயோகித்தால் எந்த ஒரு உண்மையான  முஸ்லிம் பெண்ணும் விரும்பமாட்டாள்.அது எவ்வாறான சந்தர்ப்பமாக இருந்தாலும் சரியே!

அந்த விரும்பாமையை தெளிவாக உலகமே பார்க்கும் வன்னம் இம்முறை கொரியாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் நடுவர் ஹிஜாப் அணிந்து விளையாட அனுமதி வழங்காததால் தாம் போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்துவிட்டு அரங்கைவிட்டு வெளியேறி இருக்கிறது  கட்டார் பெண்கள் அணி.
சத்தியத்தின் முன் அசத்தியம் நிற்காது என்பதை இது தெளிவு படுத்துகின்றதல்லவா??
வெளியேறிய அணி உலக மக்களுக்கு விடுக்கும் செய்தி "நாங்கள் அற்ப விளையாட்டிற்காய் இஸ்லாத்தை பணயம் வைக்க தயாரில்லை என்பதே!


இவ் ஆடைக் கலாச்சாரத்தின் மூலம் விளையாடுபவர்களினது  விளையாட்டுத் திறன் அதிகரிக்கவோ எதிரணிகளுக்கு தொந்தரவாகவோ ஒரு போதும் அமையப் போவதில்லை.அப்படி இருக்க இவ் அணியை இஸ்லாமிய ஆடைக் கலாச்சாரத்தை காட்டி ஏன் வெளியேற்ற வேண்டும்? இத் தடைகள்  ஒன்றும் முஸ்லிம் பெண்களுக்குப் புதியது அல்ல.பாடசாலைகளில் பல்கலைக்கழகங்கலில்இபொது இடங்களில் இஸ்லாமிய ஆடைக்கலாச்சாரத்திற்கான தடைகள் வலுப்பது யாவரும் அறிந்ததே.ஏன்?இலங்கையின் இலத்திரனியல்  தேசிய அடையாள அட்டையில் கூட இஸ்லாமிய ஆடைக் கலாச்சாரத்திற்கு தடை விதிக்கப் பட்டிருந்தது.எனினும் இத் தடைகள் பலதை தகர்த்தெறிந்து சாதனைகள் பலதையும் எம் முஸ்லிம் பெண்கள்  தன்னகப்படுதிய பல வரலாற்றுச் சான்றுகள் உள்ளன.

இதில் நகைச்சுவை என்ன வென்றால் இத் தடை விதிப்பு முஸ்லிம் பெண்களின் நலனுக்கே என காரணம் காட்டிய சில சந்தர்ப்பங்களும் உள்ளன. பத்தோடு பதினொன்றாக முஸ்லிம்களும் இருக்க வேண்டும் என்பதே  அவர்களினது  கொள்கை .வேறு அவர்கள் செய்வது சரியா? பிழையா? என்பதை சிந்தனை கொள்வதை விட்டும் அவர்கள் பின்பற்றும்  மதமும் இன்றைய நாகரீகம் என்ற பெயரில் அணியப்படும் ஆடைகளும் தடுக்கின்றன.

எவ்வாறான நாகரீகம் மிகைத்த ஒருவராக இருந்தாலும் சரி இன்று விளையாட்டுக்களின் போது அணியப்படும் ஆடையை  சாதாரணமாக அணிந்து கொண்டு உலா வர மாட்டார்கள்.சாதாரணமாக அணிய வெட்கிக்கும்இகேவலமாக அணியும் ஆடையை  விளையாட்டுக்களின் போது அணிவது மாத்திரம் கேவலம் இல்லையா?? ஏன் சிந்திக்க மறுக்கின்றீர்களோ?

இவ்வாறான ஆடைக்குறைவுக் கலாச்சாரம் பல பாதிப்புக்களை ஏற்படுத்தும் என்பதை இவ்வாறானவர்கள்  சிந்திக்கவோ ஏற்கவோ  தயாரில்லை?இஸ்லாம் காட்டிய ஒரு வழி முறையை புறக்கணித்தால் ஒரு போதும் அதற்கு மாற்று வழிகள் தீர்வாகப் போவதில்லை.மாறாக பல எதிர் விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை வரலாற்றுச் சான்றுகள் பல எமக்கு நிரூபணம் செய்கிறது.

அண்மையில் உலக அரங்கில் பிரபலமான ஒரு செய்திதான் இங்கிலாந்து இளவரசியின் குட்டைப் பாவாடை நிகழ்வொன்றின் போது  பறந்து பர பரப்பை ஏற்படுத்தி இருந்தது.இதன் பின்னர் இங்கிலாந்து ராணி எலிஸபத்இவில்லியம் இன் மனைவி கேட் மேட்டில்டன் இற்கு நீளமான பாவாடைகள் அணியும் பணி அறிவுறுத்தி இருந்தமை இங்கே கோடிட்டு காட்ட வேண்டிய மேலுமொரு விடயமாகும்.

இஸ்லாமிய வழி முறையை இவ் இளவரசி பின்பற்றி இருந்தால் இவ் அவமரியாதை இவ் இளவரசிக்கு ஏற்பட்டிருக்குமா?

சீனா,இங்கிலாந்து சுவிஸ்சிலாந்து உகண்டா ஆகிய நாடுகளில் விபச்சாரம் அநாச்சாரம்,கலாச்சார சீர்கேடுகள் போன்றவை நடப்பதை  தடுக்க குட்டைப் பாவாடையை தடை செய்துள்ளார்கள்.

நாம் எமது உடலை மறைப்பதன் மூலம்  எமது மானம் காக்கப்படுவது மாத்திரமின்றி அதன் மூலம் விளைவாக்கப்படும் அனாச்சாரங்களும் தடுக்கப்படுகின்றன.அவ்வாறான  ஆடைக் கலாச்சாரம் இடத்திற்கு இடம் மாறுபடுவதன் மூலம் மானம்  காக்கப் படும் அளவு அளவு மாறுபடுவது  நகைப்பிற்கு உரியது.

வெற்றிக்காய் மானத்தை சிறிது  இழப்பதில் தவறில்லை என்று யாராவது கூறுவார்களாக இருந்தால் மானத்தை பணத்திற்காய் விற்கும் வேசிக்கும்  இவர்களுக்கும் என்ன தான் வேறு பாடு உள்ளது?

பிறந்த குழந்தையின் வளர்ச்சி நிலைகள்

தாயின் கர்ப்பப் பையில் கருவாக உருவாகி, 9 மாதத்தின் நிறைவில் சரியான உடல் எடையுடன் பிறக்கும் குழந்தைகளின் வளர்ச்சி ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு விதமாக இருக்கும்.
அந்த வகையில், ஒரு சில குழந்தைகள் விரைவாகவே திரும்புதல், தவழுதல் போன்றவற்றை செய்யலாம். சில குழந்தைகள் மாதங்கள் கடந்தும் செய்யலாம். அது அவற்றின் வளர்ச்சியைப் பொருத்த விஷயமாகும். ஆனால் பொதுவாக குழந்தைகளின் வளர்ச்சியைப் பற்றி இங்கு காணலாம்.
முதல் மாதம்
கை, கால்களில் அசைவு இருக்கும். 24 மணி நேரத்தில் 22 மணி நேரம் உறங்கிக் கொண்டுதான் இருக்கும். பசிக்காகவும், உடல் உபாதைகளுக்காகவும் குழந்தைகள் அழும்.
இரண்டாம் மாதம்
அசைவுகளை உணரும். அழுகையைத் தவிர சில சிறிய சத்தத்துடன் கத்தும். தாயின் அரவணைப்பை நன்கு உணர்ந்திருப்பர்.
மூன்றாம் மாதம்
தாயின் முகம் நன்கு அறிந்திருக்கும். குரல்களைக் கேட்டு அந்தப் பக்கமாகத் திரும்பும். அசைவுகளை உற்று நோக்கும்.
நான்காம் மாதம்
நிறங்களை அறிந்திருக்கும். குழந்தைகளுக்கு கழுத்து நிற்க ஆரம்பிக்கும். கழுத்தை அவர்களாக திருப்பி அசைவுகளை கவனிப்பார்கள். அவர்களது பெயரை கூப்பிட்டால் அந்த திசையை நோக்கி திரும்புவார்கள்.
5ம் மாதம்
ஒரு பக்கமாக ஒருக்களித்து படுப்பார்கள். கவிழ்ந்து கொள்ள முயற்சித்து கை சிக்கிக் கொண்டு அழுவார்கள். இந்த மாதங்களில் குழந்தைகள் கவிழ்ந்து கொள்ள எடுக்கும் முயற்சிகள் தோல்வியாகவே இருக்கும்.
6ம் மாதம்
வாயில் நுரை வரும். பேசுவதற்கு வாயைக் குழப்புவார்கள். கவிழ்ந்து கொள்வார்கள். தலை நன்றாக நிற்கும். பால் பற்கள் முளைக்கத் துவங்கியிருக்கும்.
7ம் மாதம்
ஒரு முறை கவிழ்ந்தும், அதில் இருந்து திரும்ப மல்லாக்காக படுத்தும் உருளுவார்கள். சில குழந்தைகள் பின்னுக்கு செல்ல காலை உதைக்கத் துவங்கும். உட்கார வைத்தால் உட்காருவார்கள்.
8ம் மாதம்
பொம்மைகளை வைத்துக் கொண்டு விளையாடுவார்கள். எந்த பொருளையும் வாயில் வைத்துக் கொள்ள முனைவார்கள். தானே உட்காருவார்கள். நிற்க வைத்தால் தள்ளாடிக் கொண்டே நிற்பார்கள்.
9ம் மாதம்
ஒரு அடி எடுத்து வைத்து நடப்பார்கள். அவர்களது பெயரைக் கூப்பிட்டால் திரும்பி பார்ப்பார்கள். ஒவ்வொரு வார்த்தைகளாக பேசுவார்கள். தாய், தந்தையை அடையாளம் காட்டுவார்கள்.
10ம் மாதம்
அத்தை, தாத்தா, மாமா போன்றவற்றை நன்கு உச்சரிப்பார்கள். தாயின் பாடலுக்கு நடனமாடுவார்கள். டாடா சொல்வது, உணவை மறுப்பது, தெரியாதவர்களிடம் செல்ல மறுப்பது போன்றவை உருவாகும்.
12ம் மாதம்
ஒரு வயது நிரம்பும் போது முன்வரிசை பால் பற்கள் அனைத்தும் முளைத்திருக்கும். விழுந்து எழுந்து அவர்களாக நடப்பார்கள். பல வார்த்தைகளை அவர்களாகவே பயன்படுத்துவார்கள். ஒரு சில குழந்தைகள் ஒன்றிரண்டு வார்த்தைகளை இணைத்துப் பேச முயற்சிக்கும். பொருட்களையும், உறவினர்களையும் அடையாளம் காட்டுவார்கள்.
15வது மாதம்
தனியாக நடப்பார்கள். உணவுகளை ருசித்து உண்பார்கள். சூழ்நிலைக்கு ஏற்ப பயம், சந்தோஷம், அழுகை ஆகியவற்றை அவர்களே வெளிப்படுத்துவார்கள். படிகட்டுகளை ஏற முயற்சிப்பார்கள். வார்த்தைகளை தெளிவாக பேசுவார்கள்.
இவ்வாறாக குழந்தை வளர்ந்து சிறுவனாகிறது. இந்த படிநிலைகளில் சில குழந்தைகளின் வளர்ச்சியும், மற்ற சில குழந்தைகளின் வளர்ச்சியும் வேறுபடும்.

1 வயது வரை குழந்தைக்கு கொடுக்க வேண்டிய உணவு முறைகள்:-
பிரசவம் முடிந்துவிட்டால், நிம்மதி அடைந்துவிட வேண்டாம். ஏனெனில் இனிமேல் தான் வேலையே இருக்கிறது. என்ன புரியலையா? அது தான் குழந்தையை நன்கு பராமரிப்பது. ஏனெனில் பிரசவத்திற்கு பின் சிறிது நாட்கள், அம்மா, உறவினர்கள் என்று வீட்டில் இருப்பார்கள். அப்போது எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் குழந்தை பிறந்த பின்பு, அந்த குழந்தைக்கு எந்த அளவு தாய்ப்பால் கொடுக்க வேண்டும், மேலும் வளர வளர எவ்வளவு உணவு கொடுத்தால், குழந்தை நன்கு ஆரோக்கியமாக இருக்கும் என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் தற்போதுள்ள குழந்தைகள் விரைவில் குண்டாக மாறிவிடுகின்றனர். எனவே அவர்களின் உடலை ஆரோக்கியமாகவும், ஃபிட்டாகவும் வைத்துக் கொள்ள வேண்டியது ஒரு தாயின் கடமை. இப்போது குழந்தை பிறந்த பின்னர், ஒரு வயது ஆகும் வரை எவ்வளவு உணவானது தேவைப்படும் என்பதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்…
0-4 மாதம் வரை
நிறைய ஆய்வுகள், குழந்தை பிறந்த பின்னர், அவர்களுக்கு தாய்ப்பாலிலேயே குழந்தைக்கு வேண்டிய அனைத்து சத்துக்களும் கிடைத்துவிடும் என்று சொல்கிறது. ஏனெனில் தாய்ப்பாலில் அளவுக்கு அதிகமான நோய் எதிர்ப்புச் சக்தி நிறைந்துள்ளது. மேலும் அந்த தாய்ப்பால், அவர்களின் உடலில் உள்ள கழிவுகள் வெளியேற்றுவதோடு, பிறந்த குழந்தைக்கு மஞ்சள் காமாலையை ஏற்படுத்தும் பிலிரூபின் என்னும் நிறமியை வெளியேற்றிவிடும். அதிலும் அந்த தாய்ப்பாலை குறைந்தது நான்கு மாதங்களுக்கு கொடுக்க வேண்டும். இதனால் அவர்களது உறுப்புகள் அனைத்தும் வலுவடைவதோடு, செரிமான மண்டலமும் நன்கு செயல்பட ஆரம்பிக்கும்.
4-6 மாதம் வரை
நான்கு மாதங்களுக்குப் பின்னர் குழந்தைகள் வேறு உணவை சாப்பிடுவதில் கவனத்தை செலுத்துவது போன்று தெரிந்தால், அப்போது ஒரு டேபிள் ஸ்பூன் வேக வைத்த இனிப்பு உருளைக்கிழங்கு, கேரட், ஆப்பிள், வாழைப்பழம், பீச் போன்றவற்றை நன்கு மசித்து கொடுக்க வேண்டும். அதிலும் இவர்களது ஆர்வத்தை எவ்வாறு தெரிந்து கொள்வதென்றால், ஒரு நாளைக்கு 8-10 முறை தாய்ப்பால் கொடுத்தும் அவர்கள் பசிக்கு அழுதால், அப்போது இந்த உணவுகளையும், தாய்ப்பால் கொடுத்து சிறிது நேரத்திற்குப் பின் கொடுக்கலாம். அதுவும் ஒரு டேபிள் ஸ்பூன் தான் கொடுக்க வேண்டும்.
6-8 மாதம் வரை
இந்த மாதங்களல் தாய்ப்பால், பழங்களை கொடுக்கும் போதோ, மெதுவாக வேக வைத்து மசித்த சாதம், காய்கறிகள், பருப்பு வகைகள், சிக்கன் போன்ற அனைத்தையும் கொடுக்கலாம். அதிலும் அவ்வாறு கொடுக்கும் போது, அவர்களுக்கு 3-9 டேபிள் ஸ்பூன் செர்லாக், 2-3 முறை தாய்ப்பால் மற்றும் 1/4 அல்லது 1/2 கப் வேக வைத்து மசித்த காய்கறிகள் என்று கொடுக்க ஆரம்பிக்கலாம். மேலும் அவ்வாறு இவற்றையெல்லாம் கொடுக்கும் போது, குழந்தைகளுக்கு அந்த உணவுகளால் ஏதாவது அலர்ஜி போன்று வருகிறதா என்று அவ்வப்போது கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு வந்தால், உடனே அந்த உணவுகளில் எவற்றால் ஆகிறது என்று மருத்துவரிடம் சென்று ஆலோசித்து, அவற்றை தவிர மற்றவற்றை கொடுக்கலாம்.
8-10 மாதம் வரை
இந்த வயதில், சீஸ், தயிர் மற்றும் இரும்புச்சத்துள்ள தானியங்களான அரிசி, பார்லி, கோதுமை மற்றும் ஓட்ஸ் போன்றவற்றை மெதுவாக கொடுக்க ஆரம்பிக்கலாம். மேலும் அத்துடன் 1/4 கப் புரோட்டீன் உணவுகளான முட்டை, மீன் போன்றவற்றையும் கொடுக்க ஆரம்பிக்கலாம்.
10-12 மாதம்
இந்த வயதில் அனைத்து உணவுகளையும் கொடுக்கலாம். ஆனால் அது அளவாக இருக்க வேண்டும். மேலும் இந்த வயதில் உணவுகள் கொடுக்கும் போது மிகவும் கவனமாகவும், அளவாகவும் கொடுக்க வேண்டும். அதாவது 1/3 கப் பால் பொருட்கள் அல்லது 1/2 கப் சீஸ் உடன் 1/4 அல்லது 1/2 கப் சாதத்துடன், காய்கறிகள் மற்றும் புரோட்டீன் உணவுகளை நிச்சயம் கொடுக்க வேண்டும்..!

கர்ப்ப காலத்தில் "ஸ்கேன்" பரிசோதனையின் பங்களிப்பு

  • முதலில் ஸ்கேன் என்பது என்ன?
ஒரு பொருளை, ஒரு உடலை, ஒரு உறுப்பை ஆராய்ந்து பார்ப்பது ஸ்கேன்.  இந்த ஸ்கேனில், அல்ட்ரசவுண்டு ஸ்கேன், சி.டி ஸ்கேன், எம்.ஆர்.அய் ஸ்கேன் என்று பலவகை உண்டு. கர்ப்ப காலத்தில் நாம் உபயோகிப்பது அல்ட்ராசவுண்டு ஸ்கேன் மட்டுமே. மிகவும் அத்தியாவசியமானால் மட்டும் எம்.ஆர்.அய் ஸ்கேன் எடுப்பதுண்டு.

  • ஸ்கேன் எப்படி செய்யப் படுகிறது ?
ஒலி அலைகள் உடலுக்குள் செலுத்தப்பட்டு  அவை திரும்பிப்பெறப்படுகிறது. கண்ணாடியில் ஒளி பட்டு திரும்பும்போது உருவம் கிடைப்பது போல, அல்ட்ராசவுண்டு ஸ்கேனில் ஒலி அலைகள் உபயோகப்படுத்தபடுகிறது. இவை எக்ஸ்ரே போன்றது கிடையாது. எக்ஸ்ரே கர்ப்பகாலத்தில் முடிந்தவரைக்கும் தவிர்க்கப்படுகிறது. எக்ஸ்ரேயில் தீமைகள் உண்டு. ஆனால் அல்ட்டராசவுண்டு ஸ்கேனில் தீமைகள் கிடையாது.

  • ஸ்கேன் எப்பொழுது எடுக்க வேண்டும்? ஏன் எடுக்கவேண்டும்?

முதலில் ஏன் எடுக்க வேண்டும் என்று பார்ப்போம்.
முதல் மூன்று மாதங்களில் பெண் பரிசோதிப்பதின்
மூலமோ, சிறுநீர்ப்பரிசோதனை மூலமோ, குழந்தை நன்றாக
இருக்கிறதா, ஒன்றா அல்லது இரண்டா, வளர்ச்சி சரியாக
இருக்கிறதா? என்ற விஷயங்கள் தெரியாது. இவற்றை
கண்டுபிடிக்க ஸ்கேன்  அவசியமாகிறது. ஒன்றுமே பிரச்சனை
இல்லையென்றால், முதல்  கேன்11-14 வாரங்களில்
எடுக்கலாம். ஆனால் கர்ப்பமாயிருக்கும் பெண்ணிற்கு வயிறு
வலி அல்லது சிறிது  இரத்தபோக்கு ஏற்பட்டால்
உடனடியாக ஸ்கேன் எடுக்க வேண்டும். அது 6
வாரமாயிருந்தலும், 8 வாரமாகயிருந்தாலும்
பரவாயில்லை.

முதல் கர்ப்பம் டியூபில் தங்கியிருந்ததாகவோ, அல்லது அபார்ஷன் ஆகியது என்றாலும் அடுத்த கர்ப்பத்தில் சீக்கிரமே (கர்ப்பம் என்று கண்டுபிடித்தவுடனே ) ஸ்கேன் செய்து கொள்வது நல்லது.


மாதவிடாய் சரியாக மாதாமாதம் வராமல் இரண்டு மூன்று மாதத்திற்கு ஒருமுறை மாதவிடாய் ஆகிறவர்களும் சீக்கிரமே ஸ்கேன் எடுப்பது அவசியம். சீக்கிரமே எடுக்கும் ஸ்கேன் மூலம், டெலிவரி ( பிரசவ ) தேதியை சரியாக குறிக்க முடியும். சீக்கிரமே எடுக்கும் ஸ்கேனால் எந்தபிரச்சனையும் ஆகாது.
சீக்கிரமே எடுக்கும் ஸ்கேன் வயிறு வழியாக அல்லாமல்,
பிறப்புறுப்பு (VAGINAL SCAN) வழியாகவும் எடுக்க
வேண்டி இருக்கலாம். அதனாலும் ஒன்றும் பயமில்லை.
கர்ப்பத்திற்கு எந்தவிதமான கெடுதலும் ஆகாது.


சில சமயங்களில் முதல் மாதத்திலேயே இரண்டு, மூன்று

முறை ஸ்கேன் எடுக்க நேரிடலாம். உதாரணத்திற்கு முதல் முறை பார்க்கும் போது குழந்தையின் இதயத்துடிப்பு தெரியவில்லை என்றால் இரண்டு வாரம் கழித்து பார்க்க வேண்டியிருக்ககும். தொடர்ந்து சிறிது சிறிது இரத்தப்போக்கு  இருந்து கொண்டேயிருந்தால், குழந்தை நன்றாக இருக்கிறதா  என்று ஒவ்வொரு முறையும் ஸ்கேன் எடுக்க வேண்டி  இருக்கலாம். இவ்வாறு ஆரம்பத்திலேயே அடிக்கடி ஸ்கேன் எடுப்பதால் எந்தப் பிரச்சனையும் கிடையாது.

11முதல்14 வாரங்கள் வரை எடுக்கும்  ஸ்கேனில் குழந்தையின் முழு உருவத்தையும் பார்க்கலாம். தலை, முகம், கால், முதுகெலும்பு, இதயம், வயிறு என எல்லாவற்றையும் பார்க்க முடியும். ஆம் இந்த மாதத்திலேயே எல்லா உறுப்புகளும் வந்து விடும். அதன் பிறகு ஒவ்வொரு உறுப்பும் பெரிதாவதும், வேலை செய்ய முதிர்ச்சிஅடைவதும் நடக்கும். இந்த சமயத்தில் குழந்தையின் கழுத்துக்குப் பின்புறம் இருக்கும் தோலின் தடிமனை அளப்பார்கள். (NUCHEAL THICKNESS). இது அதிகமாக இருந்தால், குழந்தைக்கு சில குறைகள் இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம். அம்மாதிரி இருந்தால் இன்னும் சில இரத்த பரிசோதனைகள், உள்ளுக்குள் இருக்கும் குழந்தையினுடைய இரத்த பரிசோதனை ஆகியவை செய்ய நேரிடலாம்
.
DOWN’S SYNDROME  என்பது மரபணுக்கள் பாதிப்பினால் ஏற்படும் ஒரு நிலை. இதனால் பாதிக்கப்பட்டவர்கள், முகம் சற்று சீனாக்காரர்கள் போல் இருக்கும். கண்கள் குறுகி, மூக்கு சப்பையாக, நாக்கு தடித்து, கழுத்து சிறிதாக, மூளை வளர்ச்சி குறைந்து காணப்படுவார்கள். இந்த நிலையில் குழந்தையின் கழுத்து தோல் (NUCHEAL THICKNESS) தடித்து காணப்படும்.

  • அடுத்து எந்த மாதம் ஸ்கேன் எடுக்க வேண்டும் ?

20-22 வாரங்களில் எடுக்க வேண்டும்.
இது மிகவும் முக்கியமான ஸ்கேன். உடல் உறுப்புகள்
ஒவ்வொன்றையும் நன்றாக ஆராய இது சரியாண தருணம். இதற்கு முந்தைய ஸ்கேனில் உடல் உறுப்புகள் மிகவும் சிறியதாக இருப்பதால் அதனை ஆராய்வது கடினமாக இருக்கும். கடைசி சில வாரங்களில் (பிரசவ தேதி நெருங்கும் சமயத்தில்) எடுக்கும் போது குழந்தை மிகவும் பெரிதாக வளர்ந்து இருக்கும். நீர் குறைவாக இருக்கும். அந்த சமயத்தில் பார்ப்பதும் கஷ்டம்.
எனவே குழந்தைக்கு ஏதேனும் ஊனம், குறைபாடு இருக்கிறதா
என்று கண்டறிய 20-22 வாரங்களில் செய்யும் ஸ்கேனே தகுந்தது.
மேலும்  தீர்க்க முடியாத குறைபாடுகள் உள்ள குழந்தை இருக்கும்
பட்சத்தில், அபார்ஷன் செய்யவும் இந்த சமயத்தில் முடிய்ம். 20-22
வாரங்களில் எடுக்கும் ஸ்கேனை TARGETTED SCAN (அதாவது
குறைபாடுகள் இருக்கிறதா என்பதை குறிப்பாக கவனித்தல்) என்று
சொல்வார்கள்.

கர்ப்ப காலத்தில் ஒரே ஒரு ஸ்கேன் தான் என்னால் எடுக்க
முடியும் என்று யாராவது சொன்னால் அவர்களை இந்த மாதத்தில்
செய்து கொள்ளச் செய்வது நல்லது. 5 ஆம் மாதத்தில் (20 – 22
வாரங்களில்)  செய்யும் இந்த ஸ்கேன் மிக முக்கியமானது என்பதால்
சில விஷயங்களை கவனத்தில் கொள்வது நல்லது. இந்த ஸ்கேனை
நல்ல பெரிய மெஷின் வைத்து கர்ப்ப ஸ்கேன்கள் அதிகம் செய்யும்
அனுபவமுள்ள டாக்டரிடம் செய்து கொள்வது நல்லது. கட்டாயம்
படங்கள், ரிப்போர்ட்டுகள் வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும்.
அடுத்த ஸ்கேன் பிரசவ தேதிக்கு அருகாமையில் எடுத்தால் போதும்.

  • இந்த ஸ்கேன் எதற்காக பயன்படும்?

பிரசவ தேதிக்கு அருகாமையில் எடுக்கும் ஸ்கேன் குழந்தையின்
தலை கீழே இருக்கிறதா, குழந்தையின் எடை எவ்வளவு,
குழந்தையின் அசைவுகள் நன்றாக இருக்கிறதா?, குழந்தையைச்
சுற்றி இருக்கும் நீர் போதுமான அளவு இருக்கிறதா?
என்பவற்றைச் சொல்லும். இந்தத்தகவல்களை வைத்துக்கொண்டு
டாக்டர் எவ்வளவு நாள் காத்திருக்கலாம், தானே வலி எடுக்கும்
வரை பொறுத்திருக்கலாமா?

ஆபரேஷன் செய்ய வேண்யிருக்குமா என்று முடிவெடுப்பார்கள்.
சிலசமயங்களில், குழந்தையின் வளர்ச்சி குறைந்திருப்பதாக
சந்தேகம் வந்தாலோ, நீர் குறைவாக இருக்கிறது என்று
நினைத்தாலோ, குழந்தையின் அசைவு குறைவாக இருந்தாலோ, எந்த நேரத்தில் வேண்டுமானாலும் ஸ்கேன் எடுக்க வேண்டி வரலாம்.
கடைசி வாரங்களில் எடுக்கும் இந்த ஸ்கேனில் குழந்தைக்கு
குறைபாடுகள் இருந்தால் கண்டுபிடிப்பது கடினம். பிரசவ
தேதியும் எப்பொழுதுமே முதல் மூன்று மாதங்களில் செய்யும் ஸ்கேன் வைத்து நிர்ணயிக்கப்படுவது தான். கடைசி வாரங்களில் பிரசவ தேதியை மிகச்சரியாக நிர்ணயிக்கமுடியாது.

ஆகவே ஒவ்வொரு கால கட்டத்தில் எடுக்கும் ஸ்கேனுக்கு ஒவ்வொரு முக்கியத்துவம் உண்டு. ஸ்கேன்  என்பது  நிச்சயமாக  ஒரு  உபயோகமான பரிசோதனை. ஆனால் அது 100 % நம்பகூடியது அல்ல. ஸ்கேன் மூலம் குழந்தையின் மூளை வளர்ச்சி, கண் பார்வை, காது கேட்கும் திறன், சில தோல் வியாதிகள், சில இருதய வியாதிகள் மற்றும் சில வியாதிகளும் கண்டுபிடிக்க முடியாது. பார்க்கும் போது குழந்தை எந்த நிலையில் உள்ளது, என்ன மாதிரி ஸ்கேன் மிஷின் வைத்து பார்க்கிறோம், எந்த கால கட்டத்தில் பார்க்கிறோம் என்பதை பொறுத்து ரிசல்ட் மாறலாம்.





தற்­கா­லத்தில் எந்­தத்­து­றை­யிலும் புதிய தொழில்­நுட்­பங்கள் உள்­நு­ழைக்­கப்­பட்டு வேலைகள் திறம்­ப­டவும் துரி­த­மா­கவும் துல்­லி­ய­மா­கவும் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன. அந்த வகையில் மருத்­து­வத்­து­றையை பொறுத்த வரை­யிலும் பல்­வே­று­பட்ட நவீன யுக்­திகள் சிகிச்­சை­க­ளுக்கு பயன்­ப­டுத்­தப்­பட்டு வரு­கின்­றன.

பெண் நோயியல் சம்­பந்­த­மான பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு காண்­ப­தற்கு இவ்­வா­றான நவீன தொழில் நுட்ப உப­க­ர­ணங்கள், யுக்­திகள் மற்றும் பரி­சோ­த­னைகள் பயன்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றன.
அதில் முக்­கி­ய­மான பரி­சோ­தனை தற்­கா­லத்தில் பாவிக்­கப்­பட்டு வரும் ஸ்கேன் பரி­சோ­த­னை­யாகும். இது கர்ப்­பக்­கா­லத்­திலும் சரி பெண்­களின் கர்ப்­பப்பை சூல­கங்கள் தொடர்­பான பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு காண்­ப­திலும் சரி வைத்­திய நிபு­ணர்­க­ளுக்கு மிகவும் உத­வி­யாக உள்­ளன.

கர்ப்­பக்­கா­லத்தில் ஸ்கேன் பரி­சோ­தனை செய்­வதால் உண்­டாகும் நன்­மைகள், செய்­வதன் தேவை மற்றும் விளை­வுகள் பற்றி இங்கு ஆராய்வோம்.

கர்ப்­பக்­கா­லத்தில் சாதா­ரண ஸ்கேன் பரி­சோ­தனை (Ultra sound scan) செய்­வதால் தாய்க்கோ சிசு­வுக்கோ எந்­த­வித சிக்­கல்­களும் ஏற்­ப­ட­மாட்­டாது. கர்ப்­பக்­கா­லத்தில் எந்­த­வொரு மாதத்­திலும் அதா­வது முதல் மாதம் தொடக்கம் இறுதி மாதம் வரைக்கும் தேவைக்­கேற்ற வகையில் எவ்­வித தயக்­கமும் இன்றி ஸ்கேன் பரி­சோ­தனை செய்ய முடியும். இப்­ப­ரி­சோ­தனை மூலம் வயிற்றில் உள்ள கருவின் ஆரோக்­கியம், அதன் சரி­யான திகதி, சிசுவின் வளர்ச்சி முறைகள், சிசுவின் வளர்ச்­சிக்­ குறை­பா­டுகள், சிசு இருக்கும் விதம், அங்­க­வீ­னக்­கு­றை­பா­டுகள், சிசுக்­களின் எண்­ணிக்கை மற்றும் தொப்புள், நச்­சுக்­கொடி இருக்கும் விதம் எனப்­பல விட­யங்­களை அறிந்து அவற்­றுக்­கான சரி­யான சிகிச்­சை­களை சரி­யா­கத்­ திட்­ட­மிட்டு சிறந்த கர்ப்­பக்­கால பரா­ம­ரிப்பை வழங்­கக்­கூ­டி­ய­தாக உள்­ளது. இதன்­மூலம் ஆரோக்­கி­ய­மான சிறந்த குழந்­தையை பெற்­றெ­டுக்க முடியும்.

கர்ப்­பக்­கா­லத்தில் ஸ்கேன் பரி­சோ­த­னை­யா­னது பல்­வே­று­பட்ட நிலை­களில் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றது. இது 3ஆம் மாதம், 5ஆம் மாதம், 8ஆம் மாதம் என பல்­வே­று­பட்ட காலப்­ப­கு­தி­க­ளிலும் தேவை­யேற்­படும் சந்­தர்ப்­பங்­களில் இடை­யி­டை­யேயும் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றது.

ஆரம்ப கர்ப்­பக்­கா­லத்தில் அதா­வது முதல் மூன்று மாதங்­களில் செய்­யப்­படும் ஸ்கேன் பரி­சோ­த­னையின் நோக்கம்

ஆரம்ப கர்ப்­பக்­கா­லத்தில் அதா­வது முதல் மூன்று மாதங்­களுள் செய்­யப்­படும் ஸ்கேன் பரி­சோ­த­னையில் பல முக்­கிய விட­யங்கள் அறி­யப்­படும். அதா­வது கரு­வா­னது கர்ப்­பப்­பையின் உள்ளே சரி­யான இடத்தில் தங்கி உள்­ளது உறு­திப்­ப­டுத்­தப்­படும். அத்­துடன் கரு­வா­னது ஆரோக்­கி­ய­மாக உள்­ளதா என்­ப­தையும் அறி­வ­துடன் எத்­தனை கருக்கள் உள்­ளன என்­ப­தையும் அறிய முடியும்.
அத்­துடன் இந்த ஸ்கேன் பரி­சோ­த­னையின் போதுதான் சிசுவின் பரு­மனை அளந்து சரி­யான பிர­சவ எதிர்­பார்ப்பு திக­தியைக் குறிப்­பி­டலாம்.
இவ்­வாறு சில பெண்கள் இறு­தி­யாக மாத­விடாய் வந்த திக­தியை மறந்­தி­ருந்தால் சரி­யான பிர­சவ எதிர்­பார்ப்பு திக­தியை முதல் மூன்று மாதங்­களில் செய்­யப்­படும் ஸ்கேன் மூலம் தான் சரி­யாக கண்­ட­றிய முடியும்.

அதற்கு பிந்­திய மாதங்­களில் ஸ்கேன் செய்து இவ்­வாறு திக­தியை சரி­யாக கணிப்­பிட முடி­யாது. அத்­துடன் முதல் 3 மாதங்­களில் செய்­யப்­படும் ஸ்கேனில்தான் பெண்­களின் கர்ப்­பப்­பையில் உள்ள பைப்பு­ரோயிட் கட்­டிகள் மற்றும் சூல­கத்தில் உள்ள சூல­கக்­கட்­டிகள் பற்­றிய தக­வல்­களை அறிய முடியும்.

கர்ப்­பக்­கா­லத்தில் சிசுவின் அங்­க­வீனக் குறை­பா­டு­களை கண்­ட­றிய மேற்­கொள்­ளப்­படும் ஸ்கேன் பரி­சோ­தனை

சிசு முழு­மை­யாக விருத்­தி­ய­டைந்து சகல பாகங்­களும் உரு­வான பின்னர் சிசுவின் உறுப்­புக்­களில் ஏதா­வது குறைகள் இருக்­கின்­றதா என ஸ்கேனில் அறிய முடியும். இவ்­வாறு அங்­க­வீ­னக்­ குறை­பா­டு­களை அறியும் ஸ்கேன் 5 மாத கர்ப்­பக்­கா­லத்தில் அதா­வது 18-20 வாரங்­களில் செய்ய முடியும். இதன்­போது சிசுவின் தலை, மூளை, முதுகு, நெஞ்சு, வயிறு, இரு­தயம், கால்கள் என பிர­தான உறுப்­புக்­களில் குறைகள் இருப்­ப­தனை அறிய முடியும்.

இவ்­வா­றான ஸ்கேன் பரி­சோ­தனை குறிப்­பாக பெண்­களில் நீரி­ழிவு நோய், காக்கை வலிப்பு, இரு­தய நோய் உள்ள போதும் மற்றும் சொந்த உற­வு­களில் திரு­மணம் செய்­து­கொண்­ட­வர்­க­ளிலும் ஆரம்ப கர்ப்ப காலத்தில் சரி­யாக போலிக் அசிட் (Folic acid) விட்டமின் மாத்­தி­ரை­களை எடுக்­கா­த­வர்­க­ளிலும் மேலும் ஆரம்ப கர்ப்ப காலத்தில் வேண்­டப்­ப­டாத மாத்­தி­ரை­களை உட்­கொண்­ட­வர்­க­ளிலும் இவ்­வா­றான அங்­க­வீன குறை­களை கண்­ட­றியும் ஸ்கேன் அவ­சியம். ஏனெனில் மேற்­கு­றிப்­பிட்­ட­வர்­களில் சிசுவில் சில குறைகள் வரு­வ­தற்கு சிறிய வாய்ப்­புக்கள் உள்­ளன. அத்­துடன் 35 வய­துக்கு மேற்­பட்ட பெண்கள் கர்ப்பம் தரிக்கும் போதும் இது­போன்ற ஸ்கேன் பரி­சோ­தனை அவ­சியம்.

நிற­மூர்த்த குறை­பாட்டால் ஏற்­படும் டவுன்ஸ் குழந்­தை­களை (Down's syndrome) கண்­ட­றியும் ஸ்கேன் பரி­சோ­தனை

முதல் மூன்று மாதத்தில் செய்­யப்­படும் ஸ்கேனில் சிசுவின் கழுத்தில் பிற்­ப­கு­தியின் தடிப்பை அளந்து இதில் சற்றுக் கூடு­த­லாக தடிப்­ப­டைந்­தி­ருந்தால் டவுன்ஸ் வியாதி குறித்து சந்­தேகம் கொள்ள முடியும். அத்­துடன் சிசுவின் மூக்கின் எலும்பு விருத்­தி­ய­டை­யாத தன்­மை­யையும் பார்க்க முடியும். இவ்­வாறு டவுன்ஸ் சிசு குறித்து சந்­தேகம் இருந்தால் இதனை உறு­திப்­ப­டுத்த மேலும் சில பரி­சோ­த­னை­க­ளாக இரத்­தப்­ப­ரி­சோ­தனை மற்றும் சிசுவின் நிற­மூர்த்தப் பரி­சோ­தனை என்­பன செய்ய முடியும். இதன்­மூலம் இவ ற்றை உறு­திப்­ப­டுத்­தலாம்.

பிந்­திய கர்ப்­ப­காலத் தில் (8ஆம் ­மாதம்) செய்­யப்­படும் ஸ்கேன் பரி­சோதனை

8 மாதங்களில் செய் யப்படும் ஸ்கேன் பரி சோதனையில் சிசுவின் வளர்ச்சியை அறிய முடியும்.இதன் மூலம் சிசுவில் வளர்ச்சிக் குறைகள் இருப்பின் சிசுவை முன்கூட்டியே பிரசவிக்க முடியும். மேலும் இவ்வாறு எட்டு மாதங்களில் செய்யப்படும் ஸ்கேன் மூலம் சிசு இருக்கும் விதம், தொப்புள் நச்சுக்கொடி அமைந்திருக்கும் விதம் என் பவற்றை அறியலாம்.
இவ்வாறு ஸ்கேன் பரிசோதனை கர்ப்பக் காலத்தின் வெவ்வேறு கால கட்டத்தில் செய்யப்படும்.இதன் மூலம் பலவித தகவல்களை பெற முடியும்.

Popular Posts

FACEBOOK COMMENTS BOX